December 6, 2025, 3:01 AM
24.9 C
Chennai

வேகம் விவேகம் அல்ல..! திருப்புமுனையை உருவாக்குவோம்!

bike chain snath - 2025

வாகனத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.

அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.

அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு ???? லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு ???? பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் ???? லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது

இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது

ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் செல்கிறார் . இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.

இந்த 4 இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்தைகள், பணம் செலவு, வருவாய் இழப்பு, குடும்ப நிம்மதி இழப்பு மற்றும் பல

ஏதாவது ஒரு இடத்தில் விபத்தில் இறந்துவிட்டார் என வைத்துக் கொள்ளுவோம். அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 20 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது.

5 மற்றும் 20 ஆண்டுகள் வாழ்க்கை தரம் பின்னோக்கி செல்கிறது என்பது ஓர் ஆய்வறிக்கை ஆகும். இறந்தால் காப்பீடு மூலமாக இழப்பீடு கிடைக்கலாம். ஆனால் மனைவிக்கு கணவர் கிடைப்பாரா? பிள்ளைகளுக்கு அப்பா கிடைப்பாரா? பெற்றோருக்கு பிள்ளை கிடைப்பாரா? உடன்பிறப்புக்கு சகோதரன் கிடைப்பாரா?

ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் சென்றோம் என்றால், 12 நிமிடத்தில் 10 கிலோமீட்டர் (50 கிலோமீட்டர் / 60 நிமிடம் * 12 நிமிடம். அதாவது 50/60*12= 10 கிலோமீட்டர்) தூரம் தான்

10 கிலோமீட்டர் தூரம் முந்தி செல்வதில் எதையும் சாதித்துவிடுவது இல்லை அல்லவா?

சில நேரங்களில் நேரம் ஆகிட்டு என்று வேகமாக போகிறோம், அப்படி செல்வதில் 5 நிமிடம் சேமிக்கிறோம் என்றால் 4.15 கிலோமீட்டர் தான் முன்னால் சென்று உள்ளோம்.

அப்படி வேகமாக செல்வதினால் நமக்கு நாமே எமனாகி விடுகிறோம் அல்லது எதிரே வந்தவருக்கோ நாம் எமனாய் மாறிவிடுகிறோம். சிந்திப்பீர் செயல்படுவீர் வேகம் என்பது விவேகம் அல்ல. 5 நிமிடத்தில் ஒன்றுமே சாதித்துவிட போவதில்லை.

வேகத்தினால் நம் குடும்பத்தினரை அல்லது எதிரே வந்த நபரின் குடும்பத்தினரை கஷ்டப்படுத்தாதீர்கள் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 5 நிமிடம் முன்னதாகவே கிளம்பினால் எவ்வித பிரச்சினையும் இல்லை அல்லவா, ஆதலால் சரியான நேரத்தில் அல்லது 5 முதல் 10 நிமிடம் முன்கூட்டியே கிளம்புவோம்.

நம்மில் இனி மாற்றம் உருவாக்குவோமா? திருப்புமுனையை செயல்படுத்துவோம்

  • பகிர்வு: சூரிய பாண்டியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories