“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”
பரமபிதாவே அறிவார்.
(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா)
ஒரு சிறு பதிவு.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140 தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்தரிசனத்துக்கு வந்தாள்.
“என் மவனுக்குப் பேர் வைக்கணும்”என்று பெரியவாளிடம் பணிவாக தெரிவித்தாள்.
அழகான தமிழில்,சுந்தரமான சிவனுடையபெயர்களில் ஒன்றைக் கூறுவார்கள்,பெரியவா என்பது அருகிலிருந்த அடியார்களின் எதிர்பார்ப்பு.
“சதானந்தம்-னு பேர் வை”-பெரியவாள்.
இது பொதுப் பெயராக இருக்கிறதே? எந்த ஒரு தெய்வத்தையும் சுட்டிக்காட்டுவதாகஇல்லையே? என்று அடியார்களுக்கு மன நெருடல்.
பின்னர் தெரியவந்தது.- அந்தப் பெண்மணிz கிறிஸ்துவ மதத்தை தழுவியர் என்று. அதனால்தான்,அந்தத் தாயாரின் மனத்தில் நெருடல் ஏற்படாத வகையில்,ஒரு பொதுப் பெயரைக் கூறினார்கள் போலும்!
அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?
பரமபிதாவே அறிவார்.



