December 5, 2025, 7:02 PM
26.7 C
Chennai

செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

sengottai sundarrajaperumal kalyanam2 - 2025

செங்கோட்டை அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாணம்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் நாளான நேற்று திருக்கல்யாண மகோத்ஸவம் விமர்சையாக நடைபெற்றது.

sengottai sundarrajaperumal kalyanam7 - 2025

சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவில் அறநிலையத்துறையின் கீழ், சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

sengottai sundarrajaperumal kalyanam6 - 2025

இக்கோவிலில் திருக்கல்யாண வைபவம், கடந்த 1996 ஆம் ஆண்டு முதலில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தத் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடம் 23 ஆவது வருட கல்யாண வைபமாக புரட்டாசி முதல் நாள் நேற்று (செப்.18) புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

sengottai sundarrajaperumal kalyanam5 - 2025

இந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் ஸ்ரீபூமி, நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒரு பக்கத்தில் பெருமாளும் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழுந்தருளச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

sengottai sundarrajaperumal kalyanam3 - 2025

தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து பாலும் பழமும் நிவேதித்து, திருக்கல்யாண சடங்கும் ஊஞ்சல் வைபவமும் சிறப்பும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப் பட்ட மணமேடை மண்டபத்தில் மூவரையும் எழுந்தருளச் செய்து, வேள்வி வளர்த்து, காப்பிடுதல், பூணூல் மாற்றுதல், கோத்திரம் மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன.

sengottai sundarrajaperumal kalyanam1 - 2025

திருக்கல்யாண வைபவத்தின் முக்கிய நிகழ்வான ஸ்ரீபூமி நீளா தேவியருக்கு சுந்தராஜப் பெருமாள் திருக்கரங்களால் திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சப்த அடி, பொரியிடுதல் போன்ற வைபவங்களும் நடைபெற்றன. தொடர்ந்து திவ்யதம்பதிகளுக்கு ஆரத்தி காட்டி மகாதீபாராதனை நடைபெற்றது.

sengottai sundarrajaperumal kalyanam8 - 2025

நிறைவாக ஸ்ரீபூமி நீளாதேவி சமேதராய் அழகிய மணவாளப் பெருமாள் திருவீதி புறப்பாடு கண்டருளினார்.

இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் அருளைப் பெற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories