“இது,சங்கரம்!”முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!

“இது,சங்கரம்!”

(முதலில் “கொடுக்காதே” என்ற அதே அவர், சற்றைக்கெல்லாம், “கொடு” என்றார்.)

முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!

தொகுப்பாளர்.;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சதாராவில் முகாம். மகாப் பெரியவாளின் குருவுக்கு

ஆராதனை முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தன.

பரம நாஸ்திகராக இருந்து பெரியவாளின் முதல்

பார்வையிலேயே பரம பக்தனாக மாறிய அன்பர்.

பெல்காமைச் சேர்ந்த தாராப்பூர் துரைசாமி என்பவர்

தரிசனத்துக்கு வந்திருந்தார்.

ஸ்ரீமடத்தின் தொண்டர்களுக்கெல்லாம் நல்ல

நண்பராகியிருந்தார் அவர்.

தரிசனத்துக்கு வந்தபோது மிகவும் பண நெருக்கடி

அவருக்கு. உடனடியாக பத்தாயிரம் ரூபாய் தேவைப்பட்டது. நண்பர்களான தொண்டர்களிடம் மனம் திறந்து பேசினார். யாராவது பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவினால்,கூடிய

விரைவில் திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறினார்.

எந்தத் தொண்டரிடம் அவ்வளவு பெரிய தொகை இருக்கும்? துரைசாமிக்கு உதவி செய்வதும் முக்கியம் தான்.

மேட்டூர் ராஜகோபாலன் என்று ஓர் அணுக்கத் தொண்டர், (உயர்ந்த பதவியைத் துறந்து,மகாப் பெரியவாளால் ஆட்கொள்ளப்பட்டு பின் துறவியாகி விட்டவர்.) அவருக்கு துரைசாமியிடம் இரக்கம் தோன்றியது.

பெரியவாளிடம் சென்று, கை கட்டி நின்றார்.

“என்ன?” என்று ஒரு பார்வை.

“குரு ஆராதனைக்காக வந்த பணத்தில் மீதமிருக்கு.

தாராப்பூர் துரைசாமி ரொம்பவும் கஷ்டத்தில் இருக்கார். அதிலிருந்து துரைசாமிக்குப் பணம் கொடுத்து உதவலாமா?” என்று பணிவு தோன்ற விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவா ஒப்புக் கொள்ளவில்லை.

“எதை உத்தேசித்துப் பணம் வாங்கப்பட்டதோ அந்தக்

காரியத்தைத் தவிர,மற்ற வேலைகளுக்குச் சிலவு

செய்வது தர்ம விரோதம்” என்றார்கள் பெரியவா.

இருந்த போதிலும் துரைசாமியிடம் அன்பு இருந்தது.

ஸ்ரீ மடத்தின் பல காரியங்களில் – வியாஸ பூஜை,குரு ஆராதனை போன்றவற்றில் – அலுப்புச் சலிப்பு இல்லாமல் உழைத்திருக்கிறார்.பணச் சிலவும் செய்திருக்கிறார். கஷ்டம் என்பது தற்போது வந்த விவகாரம்.

பெரியவாள் தருமமூர்த்தி, தரும நெறியை வெறும்

வார்த்தைகளாகக் கொள்ளாமல்,மனிதாபிமான நோக்கில், நன்றி உணர்வில்,பாராட்டும் வகையில் பேராண்மை அவர்களிடம் இருந்தது. முதலில் “கொடுக்காதே” என்ற அதே அவர்,

சற்றைக்கெல்லாம், “கொடு” என்றார்.

முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories