“இது,சங்கரம்!”முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!

“இது,சங்கரம்!”

(முதலில் “கொடுக்காதே” என்ற அதே அவர், சற்றைக்கெல்லாம், “கொடு” என்றார்.)

முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!

தொகுப்பாளர்.;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சதாராவில் முகாம். மகாப் பெரியவாளின் குருவுக்கு

ஆராதனை முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தன.

பரம நாஸ்திகராக இருந்து பெரியவாளின் முதல்

பார்வையிலேயே பரம பக்தனாக மாறிய அன்பர்.

பெல்காமைச் சேர்ந்த தாராப்பூர் துரைசாமி என்பவர்

தரிசனத்துக்கு வந்திருந்தார்.

ஸ்ரீமடத்தின் தொண்டர்களுக்கெல்லாம் நல்ல

நண்பராகியிருந்தார் அவர்.

தரிசனத்துக்கு வந்தபோது மிகவும் பண நெருக்கடி

அவருக்கு. உடனடியாக பத்தாயிரம் ரூபாய் தேவைப்பட்டது. நண்பர்களான தொண்டர்களிடம் மனம் திறந்து பேசினார். யாராவது பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவினால்,கூடிய

விரைவில் திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறினார்.

எந்தத் தொண்டரிடம் அவ்வளவு பெரிய தொகை இருக்கும்? துரைசாமிக்கு உதவி செய்வதும் முக்கியம் தான்.

மேட்டூர் ராஜகோபாலன் என்று ஓர் அணுக்கத் தொண்டர், (உயர்ந்த பதவியைத் துறந்து,மகாப் பெரியவாளால் ஆட்கொள்ளப்பட்டு பின் துறவியாகி விட்டவர்.) அவருக்கு துரைசாமியிடம் இரக்கம் தோன்றியது.

பெரியவாளிடம் சென்று, கை கட்டி நின்றார்.

“என்ன?” என்று ஒரு பார்வை.

“குரு ஆராதனைக்காக வந்த பணத்தில் மீதமிருக்கு.

தாராப்பூர் துரைசாமி ரொம்பவும் கஷ்டத்தில் இருக்கார். அதிலிருந்து துரைசாமிக்குப் பணம் கொடுத்து உதவலாமா?” என்று பணிவு தோன்ற விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவா ஒப்புக் கொள்ளவில்லை.

“எதை உத்தேசித்துப் பணம் வாங்கப்பட்டதோ அந்தக்

காரியத்தைத் தவிர,மற்ற வேலைகளுக்குச் சிலவு

செய்வது தர்ம விரோதம்” என்றார்கள் பெரியவா.

இருந்த போதிலும் துரைசாமியிடம் அன்பு இருந்தது.

ஸ்ரீ மடத்தின் பல காரியங்களில் – வியாஸ பூஜை,குரு ஆராதனை போன்றவற்றில் – அலுப்புச் சலிப்பு இல்லாமல் உழைத்திருக்கிறார்.பணச் சிலவும் செய்திருக்கிறார். கஷ்டம் என்பது தற்போது வந்த விவகாரம்.

பெரியவாள் தருமமூர்த்தி, தரும நெறியை வெறும்

வார்த்தைகளாகக் கொள்ளாமல்,மனிதாபிமான நோக்கில், நன்றி உணர்வில்,பாராட்டும் வகையில் பேராண்மை அவர்களிடம் இருந்தது. முதலில் “கொடுக்காதே” என்ற அதே அவர்,

சற்றைக்கெல்லாம், “கொடு” என்றார்.

முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories