சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டின ராஜாஜியும்,
‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்த மகாத்மா காந்தியும்
மகா பெரியவரும் மகாத்மாவும்!-நன்றி சக்தி விகடன்.
பாலக்காட்டில் நெல்லிச்சேரி என்ற இடம். இங்கேதான் ஒரு வீட்டில் காஞ்சி முனிவரை தரிசனம் செய்தார் மகாத்மா காந்தி. இருவரும் பல விஷயங்கள் குறித்து விவாதம் செய்திருக்கிறார்கள். உடன் யாருமில்லை. ராஜாஜிகூட வீட்டுக்கு வெளியேதான் காத்திருந்தார்.
நேரம் கடந்துகொண்டிருக்க, உள்ளே வந்த ராஜாஜி சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டினார். ஆனால் காந்திஜியோ, ‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்தார்.
‘`சுவாமி! ஸ்ரத்தானந்தா என்ற சாதுவை இஸ்லாமியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்து விட்டார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதே தெரியவில்லை. என் கண் முன்னாலேயே இப்படியான கொடூரங்கள் நடக்கின்றன. பிற்காலத் தில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ” என்று பெரியவாளிடம் முறையிட்ட காந்தியின் முகத்தில் கவலை ரேகைகள்.
சற்று நேரம் அமைதி காத்தார் பெரியவா. பிறகு சொன்னார்:
“யாரோ ஒருவன் துஷ்டனாக இருந்தால், எல்லோரும் அப்படித்தான் இருப்பா என்று ஏன் நினைக்கணும்? நல்லவாளும் அல்லாதவாளும் எல்லா இடங்களிலும் உண்டு”
பெரியவா சொன்னதை மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் காந்தி. மகா பெரியவா தொடர்ந்தார்.
“ஒரு பேச்சுக்கு சொல்றேன்… என்னையோ, உங்களையோ ஓர் இந்துவே சுட்டு விட்டானென்றால், எல்லா இந்துக்களும் கொடியவர்கள் என்று முடிவு செய்துவிட முடியாதே…”
இந்தச் சம்பவத்தை நினைத்துப்பார்த்தால் பகீரென்கிறது. எப்போதோ இருபது வருடங் களுக்குப் பின் நடக்கப்போவதை ஞான திருஷ்டி யின் மூலம் கணித்து, சம்பந்தப்பட்டவரிடமே அதை மகா பெரியவா சூசகமாகத் தெரிவித்திருக்கிறாரே!



