தெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!

Published:

karthigai somavaram telugu - 2026

ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் கார்த்திகை மாதம் இரண்டாவது சோம வாரமான இன்று சிவஸ்தலங்கள் பக்தர்களால் நிறைந்துள்ளது.

மிகப்பெரும் சைவ க்ஷேத்திரமான ஸ்ரீசைலத்தில் விடியற்காலை 2 மணிக்கே மங்கல வாத்தியங்களுடன் பூஜைகள் தொடங்கின. புனித நதிகளில் பக்தர்கள் நீராடி ஆலயங்களில் பூஜைகளில் பங்கேற்று நதிக்கரைகளிலும் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள்.

karthigai somavaram telugu temple - 2026

ஐப்பசி மாத அமாவாசை முடிந்த பின்னர் தொடங்கும் திங்கள் கிழமையில் இருந்தே வட மாநிலங்களில் சோமவார வழிபாடு களை கட்டிவிடும்.

தமிழகத்தில், அடுத்த திங்கள் முதல் கார்த்திகை சோம வார விரதம், பூஜைகள் பக்தர்களால் கடைப்பிடிக்கப் படும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img