திருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்!

Published:

thirupathi 2 - 2026

திருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.

திருமலை ஏழுமலையானை தரிசித்து திரும்பும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது. கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள், ஒரு லட்டு, 50 ரூபாய் விலையில், லட்டு கவுண்டரில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

அது போல், கல்யாண உத்ஸவ லட்டு மற்றும் வடை பரிந்துரை கடிதங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கல்யாண உத்ஸவ லட்டையும், பரிந்துரை கடிதம் இல்லாமல் அளிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கல்யாண உத்ஸவ லட்டினைப் பெற விரும்பும் பக்தர்கள், ஒரு லட்டு 200 ரூபாய் என்ற விலையில் லட்டு கவுண்டரில் பெற்றுக் கொள்ளலாம். இது நேற்று முதல் சோதனை முறையில் அளிக்கப்பட்டு வருகிறது.

கல்யாண உத்ஸவ லட்டினை விநியோகிப்பதற்காக, 10 ஆயிரம் லட்டுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img