February 22, 2026, 1:30 AM
26.7 C
Chennai

உபநிஷத்களின் சாரம் அறிவதில் சாரமற்று இருப்பதேன்? ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2026

ஒரு அரசனுக்கு பர்ஜு என்பவன் இடத்தில் அதிகப் பிரியம் இருந்தது. இதை கண்ட மற்ற அரசவை உறுப்பினர்களுக்கு அவன் மேல் பொறாமை ஏற்பட்டது. எனவே பர்ஜுவை கடத்தி செல்வதற்கு அவர்கள் திட்டம் தீட்டினார்கள்

ஒரு நாள் அவர்கள் அவன் கைகளை கட்டி கண்களை மூடி மிக தொலைவில் இருந்த ஓர் அடர்ந்த காட்டுக்குள்ளே அவனை தனியாக விட்டு சென்றுவிட்டனர் அவன் உதவிக்காக கூச்சலிட ஆரம்பித்தான்.

அதிர்ஷ்டவசமாக அவ்வழியே வந்த ஒரு காட்டுவாசி அவனுடைய குரலைக் கேட்டான் உடனே அவனருகில் வந்து கண்களைக் கட்டியிருந்த துணியை அவிழ்த்து கை கட்டை பிரித்துவிட்டான். பிறகு பர்ஜு நாட்டிற்கு திரும்பி போகும் வழியையும் காட்டுவாசி காண்பித்தான். தனக்கு காட்டிய பாதையில் சென்று கொண்டிருக்கையில் வழியில் மற்றொரு மனிதனை சந்தித்தான். அவனிடத்தில் இருந்தும் மேற்கொண்டு செல்லும் வழியை அறிந்துகொண்டான். இவ்வாறு தான் வழியில் சந்தித்த பலரிடமும் தகவல்களை கேட்டறிந்து அதனை வைத்துக்கொண்டு தன்னுடைய நாட்டின் எல்லையை வந்தடைந்தான்.

அவனை கடத்திய ஆட்கள் முன் எச்சரிக்கையோடு செயல்பட்டதால் அவருடைய வருகையை அவர்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள் உடனே அவனை மிரட்டி நாட்டின் உள்ளே நுழைய முடியாதபடி தடுத்தார்கள். அதற்குள் இறந்து விட்டதாக அவர்கள் ஏற்கனவே அரசனுக்கு சொல்லி வைத்திருந்தார்கள் அரசனும் அவர்களுடைய வார்த்தைகளை படிப்படியாக நம்ப ஆரம்பித்தான். கடைசியில் அரசனுக்கு இவ்விஷயத்தில் முழு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது

ஒருநாள் அரசன் தலைநகரில் இருந்து கிளம்பி காட்டிற்கு வேட்டையாட சென்றான். அங்கே பர்ஜுவை சந்தித்தான் பர்ஜுவைப் பார்த்ததும் மற்றற்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு பயம் ஏற்பட்டது. இறந்து விட்டவன் எப்படி கண்முன்னே தெரிகிறான் என்று அவனை பேய் என்று நினைத்தான் உடனே அரசன் குதிரையில் ஏறி அவ்விடத்தைவிட்டு சென்று விட்டான் தன்னைப் பார்த்த பின்பும் தன்னிடம் பேசாமல் சென்ற அரசனின் செயல் பர்ஜுவின் மனதில் குழப்பங்களையும் துயரத்தையும் ஏற்படுத்தியது.

அரசனின் கண்களில் எவ்வித தோஷமும் இல்லை. அரசனின் கண்கள் பர்ஜுவின் உண்மையான உருவத்தை தான் காட்டின. தன் மனதில் இருந்த தவறான கருத்துக்களின் காரணமாக அரசனால் சரியான முடிவிற்கு வர முடியவில்லை. அரசனின் கண்களைப் போலவே உபநிஷதங்களும் எவ்வித குற்றங்களும் இன்றி விளங்குகின்றன. அவை சரியான அறிவையே ஒருவனுக்கு உண்டாக்குகின்றன. உபநிஷத்துக்களை படிப்பவர்கள் அனைவரும் உடனே ஞானத்தை அடைந்து விடுவதில்லை. காரணம் அவர்களுடைய மனங்களில் இருக்கும் தோஷங்கள், புலன் விஷயங்களில் வைக்கும் அளவு கடந்த பற்று. தான் கற்றுக்கொண்ட தத்துவத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் மற்றும் வேதாந்த கருத்துக்களை தவறாக புரிந்து கொள்ளுதல் ஆகிய தோஷங்களால் அவர்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள்.

இத்தகைய குற்றங்கள் ஒருவனிடம் இருப்பதாலேயே இத்தகைய குற்றங்கள் ஒருவனிடம் இருப்பதாலேயே ஞான சாதனமாக விளங்கும் உபநிஷத்துக்கள் எவ்வித குறையுமின்றி இருந்தபோதிலும் அவற்றிலிருந்து சரியான ஞானத்தை பெறுவதற்கு ஒருவன் தவறி விடுகிறான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories