உபநிஷத்களின் சாரம் அறிவதில் சாரமற்று இருப்பதேன்? ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2026

ஒரு அரசனுக்கு பர்ஜு என்பவன் இடத்தில் அதிகப் பிரியம் இருந்தது. இதை கண்ட மற்ற அரசவை உறுப்பினர்களுக்கு அவன் மேல் பொறாமை ஏற்பட்டது. எனவே பர்ஜுவை கடத்தி செல்வதற்கு அவர்கள் திட்டம் தீட்டினார்கள்

ஒரு நாள் அவர்கள் அவன் கைகளை கட்டி கண்களை மூடி மிக தொலைவில் இருந்த ஓர் அடர்ந்த காட்டுக்குள்ளே அவனை தனியாக விட்டு சென்றுவிட்டனர் அவன் உதவிக்காக கூச்சலிட ஆரம்பித்தான்.

அதிர்ஷ்டவசமாக அவ்வழியே வந்த ஒரு காட்டுவாசி அவனுடைய குரலைக் கேட்டான் உடனே அவனருகில் வந்து கண்களைக் கட்டியிருந்த துணியை அவிழ்த்து கை கட்டை பிரித்துவிட்டான். பிறகு பர்ஜு நாட்டிற்கு திரும்பி போகும் வழியையும் காட்டுவாசி காண்பித்தான். தனக்கு காட்டிய பாதையில் சென்று கொண்டிருக்கையில் வழியில் மற்றொரு மனிதனை சந்தித்தான். அவனிடத்தில் இருந்தும் மேற்கொண்டு செல்லும் வழியை அறிந்துகொண்டான். இவ்வாறு தான் வழியில் சந்தித்த பலரிடமும் தகவல்களை கேட்டறிந்து அதனை வைத்துக்கொண்டு தன்னுடைய நாட்டின் எல்லையை வந்தடைந்தான்.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

அவனை கடத்திய ஆட்கள் முன் எச்சரிக்கையோடு செயல்பட்டதால் அவருடைய வருகையை அவர்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள் உடனே அவனை மிரட்டி நாட்டின் உள்ளே நுழைய முடியாதபடி தடுத்தார்கள். அதற்குள் இறந்து விட்டதாக அவர்கள் ஏற்கனவே அரசனுக்கு சொல்லி வைத்திருந்தார்கள் அரசனும் அவர்களுடைய வார்த்தைகளை படிப்படியாக நம்ப ஆரம்பித்தான். கடைசியில் அரசனுக்கு இவ்விஷயத்தில் முழு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது

ஒருநாள் அரசன் தலைநகரில் இருந்து கிளம்பி காட்டிற்கு வேட்டையாட சென்றான். அங்கே பர்ஜுவை சந்தித்தான் பர்ஜுவைப் பார்த்ததும் மற்றற்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு பயம் ஏற்பட்டது. இறந்து விட்டவன் எப்படி கண்முன்னே தெரிகிறான் என்று அவனை பேய் என்று நினைத்தான் உடனே அரசன் குதிரையில் ஏறி அவ்விடத்தைவிட்டு சென்று விட்டான் தன்னைப் பார்த்த பின்பும் தன்னிடம் பேசாமல் சென்ற அரசனின் செயல் பர்ஜுவின் மனதில் குழப்பங்களையும் துயரத்தையும் ஏற்படுத்தியது.

அரசனின் கண்களில் எவ்வித தோஷமும் இல்லை. அரசனின் கண்கள் பர்ஜுவின் உண்மையான உருவத்தை தான் காட்டின. தன் மனதில் இருந்த தவறான கருத்துக்களின் காரணமாக அரசனால் சரியான முடிவிற்கு வர முடியவில்லை. அரசனின் கண்களைப் போலவே உபநிஷதங்களும் எவ்வித குற்றங்களும் இன்றி விளங்குகின்றன. அவை சரியான அறிவையே ஒருவனுக்கு உண்டாக்குகின்றன. உபநிஷத்துக்களை படிப்பவர்கள் அனைவரும் உடனே ஞானத்தை அடைந்து விடுவதில்லை. காரணம் அவர்களுடைய மனங்களில் இருக்கும் தோஷங்கள், புலன் விஷயங்களில் வைக்கும் அளவு கடந்த பற்று. தான் கற்றுக்கொண்ட தத்துவத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் மற்றும் வேதாந்த கருத்துக்களை தவறாக புரிந்து கொள்ளுதல் ஆகிய தோஷங்களால் அவர்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

இத்தகைய குற்றங்கள் ஒருவனிடம் இருப்பதாலேயே இத்தகைய குற்றங்கள் ஒருவனிடம் இருப்பதாலேயே ஞான சாதனமாக விளங்கும் உபநிஷத்துக்கள் எவ்வித குறையுமின்றி இருந்தபோதிலும் அவற்றிலிருந்து சரியான ஞானத்தை பெறுவதற்கு ஒருவன் தவறி விடுகிறான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories