ரங்கனிடம் உடலோடு ஐக்கியமான உன்னத பெண்!

panduranga
panduranga

கான்ஹோபாத்ரா பண்டரிபுரத்திலிருந்து 14 மைல் அருகிலிருக்கும் மங்களவேடா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவள்.
நடனமாதர் வகுப்பைச் சேர்ந்தவள்.

பூமியிலிருந்து ஒரு முளை வந்தால், அது வளர்ந்து செடியாகி மலரும் தறுவாயிலேயே நறுமணம் வீசும்.
ஆனால், துளசிசெடியோ முதல் இலை விடும்போதே அதைக் கசக்கினால் வாசனை வரும்.

அதுபோல் சாதாரண மனிதர்க்கு இறைவன் மீது நம்பிக்கையும் பக்தியும் வாழ்க்கைச் சம்பவங்களாலோ, குருவினாலோ, அல்லது ஏதாவது தெய்வ அனுக்ரஹத்தாலோதான் ஏற்படும்.

ஆனால், அவதார புருஷர்கள், மற்றும் உலகில் பக்தியைப் பரப்புவதற்கென்றே அவதாரம் செய்யும் பக்தர்களை இளம் வயதிலேயே அடையாளம் காணமுடியும்.

கான்ஹோபாத்ரா இளம்வயதிலேயே விட்டலன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும் பக்தியும் கொண்டாள்.
அவளது பாடல்கள், நடனம், விளையாட்டு அனைத்துமே விட்டலனைச் சார்ந்தே இருக்கும்.

ஆனால், அவளைச் சுற்றி இருந்த உலகம் வேறு மாதிரி இருந்தது. அக்காலங்களில் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக ஒரு பகுதியில் வசிப்பார்கள்.
எனவே, கான்ஹோபாத்ராவைச் சுற்றி இருந்த சூழல் சேறுபோல் இருக்க அதில் அவள் மட்டும் இறைவனுக்கேற்ற செந்தாமரையாக மலர்ந்திருந்தாள்.

எந்நேரமும் விட்டல த்யானம். அவனையே பாடுவதும் ஆடுவதும், பூஜை செய்வதுமாய் இருக்க, அவளது தாய் மற்றும் உறவினர்கள் அவளுக்கு புத்தி சொல்லி ஓய்ந்து போனார்கள். அவளது பேரழகு பற்றி ஊரே வியந்தபோதும், அவள் எதையும் லட்சியம் செய்யவில்லை.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

அந்நிய மதத்தினரின் ஆட்சிக் காலம். கான்ஹோபாத்ரா பற்றிக்‌ கேள்விப்பட்டான் அப்பகுதியின் பாதுஷா. கான்ஹோபாத்ராவை வரச்சொல்லி பல செல்வங்களைக் கொடுத்தனுப்ப, அவள் மறுத்துவிட்டாள்.

khanobathra
khanobathra

அது அரசனுக்கு அவமானமாகிவிட, அவளைக் கைது செய்து கொண்டு வரும்படி ஆணையிட்டான். கான்ஹோபாத்ரா மிகவும் அடம் பிடிப்பதைக் கண்ட வீரர்கள், அவள் அரசனுக்குப் ப்ரியமானவள் என்பதால், அவளை என்ன செய்தால் அடம் பிடிக்காமல் வருவாய் என்று வினவ, அவளோ செல்லும் வழியில் பண்டரிபுரம் உள்ளது.

ஒரே ஒரு முறை கோவிலுக்குள் சென்று விட்டலனை தரிசனம் செய்ய அனுமதித்தால் அதன் பின் உங்களோடு வருவதில் தடையில்லை என்றாள்.

அவர்களும் ஸ்வாமி தரிசனம்தானே, செய்துவிட்டு வரட்டும் என்று அவளை அழைத்துச் சென்று கோவிலின் வாயிலில் விட்டு விட்டு வேறு வாயில் வழியாக தப்பிக்காத வண்ணம் நான்கு புறங்களிலும் காவலாக நின்றுகொண்டனர்.

உள்ளே சென்ற கான்ஹோபாத்ரா பாண்டுரங்கனை கட்டி அணைத்து, அவன் திருவடிகளில் வீழ்ந்து, தன்னை அப்போதே ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினாள்.

kanabhathra 1
kanabhathra 1

தீன பதித அன்யாயீ
சரண ஆல்யேம் விடாபாயீ
மீதோ ஆஹேயாதீவின
நகளே காம்ஹீம் ஆசரண
மஜ அதிகார நாஹீம்
பேடீ தேயீ விடாபாயீ
டாவ தேயீ சரணபாசீம்
துஜீம் கான்ஹோபாத்ரா தாஸீம்

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

நானோ கதியற்றவள், அநாதை, பல குற்றங்கள் புரிந்தவள். ஆனாலும் உன் சரணத்தைப் பிடித்து விட்டேன். உயர்குலத்தில் பிறக்கவில்லை. எவ்வித ஆசாரமோ, பூஜையோ நானறியேன்.

ஆனாலும், நீ எனக்கு காட்சியளிக்க வேண்டும். உனதடிமையான எனக்கு உன் திருவடியில் இடம் தருவாய் விட்டலா! என்று கதற, ஆன்மா, உடலுடன் விட்டலனின் திருமேனியில் ஐக்கியமானது.

இம்மாதிரி உடலுடன் அர்ச்சாவதாரத்தில் ஐக்கியமான பக்தர்கள் பலர். ஆண்டாள், மீரா, ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு, திருப்பாணாழ்வார், என்று ஒரு பட்டியலே நீள்கின்றது.

ஸந்நிதியில் கான்ஹோபாத்ராவின் புடைவை மட்டும் இருந்தது.

கோவிலி‌ல் உள்ள பண்டாக்கள் வெளியில் நிற்கும் காவலர் கான்ஹோபாத்ராவை தாங்கள் ஏதோ செய்துவிட்டதாக சந்தேகப்படுவார்கள் என்று பயந்து அவளது உடைகளைக் கோவிலுக்குள்ளேயே புதைக்க, அவ்விடத்திலிருந்து நெடுநெடுவென்று அக்கணமே வானளாவ ஒரு மரம் எழும்பியது.

இதை பண்டாக்கள் காவலாளியிடம் கூற அவர்கள் அரசனிடம் தெரிக்க அவன் இதை நம்பாமல் கோபமுற்று அவனே நேரில் பண்டரி வருகிறான்.

அப்போது மன்னருக்கு மரியாதை செலுத்த அர்ச்சகர்கள் தாம்பாளத்தில் பிரசாதத்தோடு வரவேற்க அந்த பிரசாத தட்டில் மிக நீண்ட முடி ஒன்றை காண்கிறான்.

இது என்ன என அர்ச்சகரிடம் கேட்க அவர் ஏதும் அறியாமல் விழித்து முடிவில் விட்டலன் கூந்தல் என்கிறார்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

அவன் மேலும் கோபம் கொள்கிறான், உடனே சந்நிதிக்கு சென்று பார்க்கிறான் அரசன், அங்கே ப்ரத்தியட்சமாக விட்டலனை தரிசிக்கிறான்.

அப்போது விட்டலனோ !! அரசனே! நீ கானோபத்ரா! கானோபத்ரா! என சதா பாகவதளான அவளை நினைத்த படியால், அப்புண்யத்தின் பயணாக உமக்கும் என் தரிசனம் கிடைத்தது, என நீள் முடியோடு காட்சி தருகிறான், அந்த சங்கு சக்கர பாணியான விட்டலன்.

இதை கண்ட மன்னன் ஆனந்த கண்ணீரோடு மயிர் கூச்செரிய விட்டலா எமை மனித்து விடு என அவன் அஞ்ஞானம் விலக ஞானம் அடைகிறான்.

இன்றளவும் நாம் அம்மரத்தையே கான்ஹோபாத்ரா என்று வணங்கி வருகிறோம். மரத்தின் அடியில் அவளுடைய சிறிய மூர்த்தி ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

இன்றும் விட்டலனின் கோவில் ப்ரகாரத்தினுள் நெடிதுயர்ந்து நிற்கும் மரத்தை அனைவரும் கான்ஹோபாத்ரா என்று சொல்லி வணங்குகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories