December 5, 2025, 11:45 PM
26.6 C
Chennai

பக்தியின் அளவுகோல்!

chandra bhaga - 2025

ஒரு நாள் சந்திரபாகா நதிக்கரையில் ராகாவின் மகளும், நாமதேவரின் மகளும் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையில் தங்கள் தந்தையில் யார் பண்டரிநாதனின் சிறந்த பக்தர் என்ற விவாதம் ஏற்பட்டது.

வீட்டிற்குச் சென்ற நாமதேவரின் மகள் நடந்ததை தன் தந்தையிடம் கூறி, அவரிடம் முறையிட்டாள். யார் சிறந்த பக்தர் என்பதை பாண்டுரங்கன் தான் முடிவுசெய்வார் மகளே, நீ ஒன்றும் வருத்தப்படாதே என்று கூறினார். ஆனால் அவர் மகளோ சமாதானமாகவில்லை..

மகள் விடாமல் வற்புறுத்தவே, நாமதேவர் பாண்டுரங்கனிடமே சென்று யார் சிறந்த பக்தர்? என்று கேட்டுவிடமென்று முடிவு செய்தார்.

பொதுவாகவே பாண்டுரங்க விட்டலன் மீது நாமதேவர் அநேக பக்திப்பாடல்களைப் பாடித் துதிப்பவர். அதனால் மகிழ்ந்து பாண்டுரங்கன் அவரோடு நேரில் பேசுவார்.

“பாண்டுரங்கா, விட்டலா… நீயே சொல்.. ராகாகும்பர் என்னை விட சிறந்த பக்தனா என்று வினவினார். ராக்காவிற்கு இணையான ஒரு பக்தன் இல்லை என்று பாண்டுரங்கன் கூறினார்.

panduranga
panduranga

அப்படியானால் எனக்கு அதை காட்டி அருளுங்கள் என்று நாமதேவர் கூறினார். நானும் ருக்மிணியும் ராகாவின் இருப்பிடம் செல்கிறோம். நீ அங்கு வந்துவிடு என்று பாண்டுரங்கன் கூறிவிட்டு மறைந்தார்.

காட்டில் ராக்காகும்பர் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போதும் அவர் விடாமல் விட்டலா, விட்டலா என்று நாமஜபம் செய்து கொண்டிருந்தார். நாமதேவா! நாம் வந்ததையும் கவனிக்காமல் ராகாகும்பர் எவ்வளவு பக்தியுடன் ஜபம் செய்கிறான் பார்த்தாயா என்றார்.

நம் சுவாமியின் திருநாமத்தைச் சொல்ல எல்லாவற்றையும் துறந்து விட்ட ராகாவின் பக்தியை மேலும் பார் என்று நாமதேவரிடம் ருக்மிணிதேவி கூறினார்.

அப்பொழுது ருக்மிணிதேவி தனது விலைமதிக்க முடியாத மாணிக்க வளையலை ஒரு சுள்ளியின் கீழே மறைத்து வைத்தார். பிறகு மூவருமாக ஒரு மரத்தின் மறைவில் இருந்து கொண்டு ராகாவைக் கவனித்தார்கள். ராகா அந்த சுள்ளியை எடுத்தார்.

nama devar - 2025

அதனடியில் மாணிக்க வளையலைச் சாதாரணப் பொருளைப் பார்ப்பது போல் பார்த்தார். தன் மனைவி பாக்காவிடம், பாக்கா! இதோ ஒரு மாணிக்க கங்கணம். உனக்கு இது வேண்டுமா? என்றார். வேண்டாம் சுவாமி, பாண்டுரங்கன் நம்மை சோதிக்கிறார். இனி நாம் இங்கிருக்க வேண்டாம் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

நாமதேவரே! ராக்காவின் பற்றற்ற தன்மையைப் பார்த்தீர்களா? ராகாகும்பர் கல்வியறிவு இல்லாதவர்தான். இருந்தாலும் சுயநலமற்ற ஆழ்ந்த பக்தி கொண்டவர்.

சுவாமி! என் அறியாமையினால் ராகாவைத் தவறாக நினைத்து விட்டேன். மன்னித்தருளப் பிரார்த்திக்கிறேன் என்று நாமதேவர் கூறினார். பாண்டுரங்க விட்டலன், ருக்மிணித் தாயார் சகிதமாக ராகாவின் முன் பிரத்தியட்சமானார்.

ராகா, பாக்கா, அவர்களது மகளும் மெய்சிலிர்த்தனர். ராகா! நீங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பக்தியில் குறைந்தவர்கள் இல்லை.

ஐயனே! இந்த எளியேனையும் ஒரு பொருட்டாக மதித்துக் காட்சி அருளினீர்களே! எனது தவம் வீண் போகவில்லை என்று ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல என ஜபம் செய்து கொண்டே இருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories