spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்கவலை சேற்றில் சிக்கிய மன‌ யானை! மீட்டெடுப்பது எப்படி..?

கவலை சேற்றில் சிக்கிய மன‌ யானை! மீட்டெடுப்பது எப்படி..?

- Advertisement -
elephant 1
elephant 1

மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன, அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் சக்திவாய்ந்த, கீழ்ப்படிதலான, விவேகமான மற்றும் சண்டை திறன்களில் திறமையானது. பல போர்களில், போர்க்களத்தில் அனுப்பப்பட்டு வீரவர்ம ராஜாவுக்கு வெற்றியைப் பெற்று திரும்பி வரும். எனவே, ராஜாவின் மிகவும் விரும்பப்பட்ட யானையாகியது மணிகண்டன் .

நாட்கள் பல ஓடியது. யானைக்கு வயதாகியது. இப்போது யானைக்கு முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே, இப்போது மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை, ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது.

ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றது. ஆனால் அதன் கால்கள் சேற்றில் சிக்கி பின்னர் மூழ்கியது . அதிக முறை முயன்றும் சேற்றில் இருந்து அதன் காலை அகற்ற முடியவில்லை.யானை சிக்கலில் இருப்பதாக அதன் அலறல் சத்தத்திலிருந்து மக்கள் அறிந்து கொண்டனர்.

elephant 3
elephant 3

யானை மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவையும் சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும் யானையைச் சுற்றி கூடி அதை சேற்றிலிருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் நீண்ட நேரம் முயற்சி பலனளிக்கவில்லை.

அந்த வழியே வந்த ஸ்ரீநாரத மகரிஷி ஏரியைச் சுற்றி போர் முரசு இசைக்க வேண்டும் என்று ராஜாவுக்கு பரிந்துரைத்தார். சேற்றில் சிக்கிய யானை , முரசு வாசிப்பதன் மூலம் எப்படி சேற்றில் இருந்து வெளியே வரும் என்று, வினோதமாக அனைவரும் பார்த்தார்கள்.

போர் முரசு ஒலிக்கத் தொடங்கியவுடன், அந்த யானையின் உடல் மொழியில் மாற்றம் ஏற்பட்டது. முதலில் யானை மணிகண்டன் மெதுவாக எழுந்து நின்று, பின்னர் சேற்றில் இருந்து தானாகவே வெளியே வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

யானையின் உடல் பலம் குறைந்து விடவில்லை, அதற்கு உற்சாகத்தை கொடுக்க வேண்டிய அவசியம் மட்டுமே இருந்தது.

vishnu
vishnu

இவ்வாறு மனிதர்கள் வாழ்க்கையில் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள, ஸ்ரீ மந்நாராயணனை நோக்கிய சிறந்த குறிக்கோள், அதற்குரிய சிந்தனை மற்றும் மனநிலையையும் பராமரிக்க வேண்டியது அவசியம்.

மேலும் நாம் எந்த சூழலிலும் விரக்தி அடைய கூடாது. இந்த சவாலான காலத்தில் நாம் அனைவரும், நம்மையும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் நம்பிக்கையுடனும், ஸ்ரீமந் நாராயணனை நோக்கி உற்சாகப்படுத்தும் படி பேச வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,133FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,904FollowersFollow
17,200SubscribersSubscribe