ஆஞ்சநேய உபாசனை: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi theerthar - 2026

பகவான் ஸ்ரீ ராமச்சந்திரருடைய பக்தர்களில் மிக உயர்ந்தவர் ஹனுமான். அவர் ஈஸ்வர அம்சத்தினால் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே மிகுந்த சக்தி கொண்டவர்.

ஸ்ரீ ராமருக்கும் ஸுக்ரீவனுக்கும் ஸ்னேகத்தை ஏற்படுத்தியவர். சீதையைக் கண்டு பிடித்து ஸ்ரீராமருக்கு தகவல் சொன்னவர் . அவருடைய குணங்களை பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரே புகழ்ந்திருக்கிறார்.

அதாவது, பராக்ரமமும் சாமர்த்தியமும் பிரக்ஞையும் ஹனுமாருக்கு விசேஷமாக உண்டு என்று கூறியிருக்கிறார்.

ராவணனின் தர்பாருக்கு சென்று கொஞ்சமும் தயங்காமல் ஹனுமார் அவனுக்கு நன்னடத்தையை பற்றி புத்திமதி சொன்னார். விபீஷணன் ராமரிடம் வந்து சரணாகதி அடைந்த பொழுது மற்றவர்கள் எல்லோரும் அவனுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று சொன்னாலும் விபீஷணனுக்கு இடம் கொடுக்கலாம் என்று உத்தமமான வார்த்தை சொன்னவர் ஹனுமான் தான்.

ஸ்ரீமத் ராமாயணத்தில் ஹனுமாருடைய பாத்திரம் மிக முக்கியமானது. வால்மீகி மஹரிஷி ஹனுமாரைப் பற்றி மிகவும் உயர்வாக கூறியிருக்கிறார்.

துளஸிராமாயணத்திலும் ஹனுமாரின் மஹிமை சிலாக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. துளஸிதாசர் எழுதின ஹனுமாந்சாலீஸா நம் நாட்டில் எல்லா இடங்களிலும் பிரச்சாரத்தில் உள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ஸ்ரீ ஹனுமாரை உபாஸிப்பதன் மூலம் புத்தியும் பலமும் கீர்த்தியும் தைரியமும் எல்லா பக்தர்களுக்கும் சந்தேகமின்றி கிடைக்கும். ஸ்ரீ ஆதிசங்கரர் மற்றும் பல மஹரிஷிகள் ஹனுமாரை ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள்.

அப்பேர்பட்ட ஹனுமாரை எல்லோரும் உபாஸித்து சிரேயஸ்ஸை அடைவார்களாக.

ஸ்ரீ ஹனுமாரை ஸ்மரிப்பதால் புத்தி, பலம், கீர்த்தி, தைர்யம், பயமின்மை, ஆரோக்யம் வாக்சாதுர்யம் ஆகிய எல்லாம் கிடைக்கும்

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories