14ஆண்டுகளுக்குப்பிறகு சென்னையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம்..

சென்னை தீவுத்திடலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு
நேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதன்பிறகு தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை 7 மணி அளவில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக மாலை 5 மணியிலிருந்து 5.30 மணி வரை வேதபாராயணமும், 5.30 மணியிலிருந்து 6 மணி வரை விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், 6 மணியிலிருந்து 6.30 மணி வரை அன்னமய்யாவின் பாடல்கள், 6.45 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணனின் தொடக்க உரை அரங்கேறியது. இதைத்தொடர்ந்து, இரவு 7 மணிக்கு சீனிவாச திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது.

வேதபாராயணம் முடிந்து பச்சை வண்ண திரைகள் திறந்து பக்தர்களுக்கு பெருமாள் ஆசி வழங்கினார். தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர், மந்திரங்கள் ஓதப்பட்டு அக்னி பிரதிஷ்டை நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை நடத்துவதற்காக உற்சவர் சுவாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. பண்டிதர்கள் திருமலையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். இரவு 9 மணி வரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருக்கல்யாண நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பாரெட்டி, தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.  சீனிவாச திருக்கல்யாணத்தையொட்டி சென்னை தீவுத்திடல் பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிரம்மாண்ட மேடையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக 10 பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

பக்தர்கள் அமரும் இடங்களில் பிரமாண்ட விளக்குகளும், எல்.இ.டி திரைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. திருமலை திருப்பதியில் இருந்து உற்சவர் சிலைகளும், 40 பட்டாச்சாரியார்களும், 100 வேதபண்டிதர்களும் வரவழைக்கப்பட்டனர்.திருமலை திருப்பதி கோயில் கோபுரம் போன்று திருக்கல்யாண வைபவ மேடை தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

மாற்று திறனாளிகளுக்கு நுழைவாயில் எண்.6ல் சிறப்பு வழி அமைக்கப்பட்டிருந்து. சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரங்கத்தை சுற்றிலும், தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தது. இரண்டு மருத்துவ மையம் அமைக்கப்பட்டிருந்தது.திருக்கல்யாண வைபவத்தை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்ததாக திருமலை தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

IMG 20220417 WA0044 - 2026
IMG 20220417 WA0040 - 2026
IMG 20220417 WA0047 - 2026
IMG 20220417 WA0038 - 2026
IMG 20220417 WA0045 - 2026
IMG 20220417 WA0048 - 2026
IMG 20220417 WA0036 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories