14ஆண்டுகளுக்குப்பிறகு சென்னையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம்..

சென்னை தீவுத்திடலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு
நேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதன்பிறகு தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை 7 மணி அளவில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக மாலை 5 மணியிலிருந்து 5.30 மணி வரை வேதபாராயணமும், 5.30 மணியிலிருந்து 6 மணி வரை விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், 6 மணியிலிருந்து 6.30 மணி வரை அன்னமய்யாவின் பாடல்கள், 6.45 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணனின் தொடக்க உரை அரங்கேறியது. இதைத்தொடர்ந்து, இரவு 7 மணிக்கு சீனிவாச திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது.

வேதபாராயணம் முடிந்து பச்சை வண்ண திரைகள் திறந்து பக்தர்களுக்கு பெருமாள் ஆசி வழங்கினார். தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 06 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பின்னர், மந்திரங்கள் ஓதப்பட்டு அக்னி பிரதிஷ்டை நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை நடத்துவதற்காக உற்சவர் சுவாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. பண்டிதர்கள் திருமலையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். இரவு 9 மணி வரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருக்கல்யாண நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பாரெட்டி, தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.  சீனிவாச திருக்கல்யாணத்தையொட்டி சென்னை தீவுத்திடல் பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிரம்மாண்ட மேடையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக 10 பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

பக்தர்கள் அமரும் இடங்களில் பிரமாண்ட விளக்குகளும், எல்.இ.டி திரைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. திருமலை திருப்பதியில் இருந்து உற்சவர் சிலைகளும், 40 பட்டாச்சாரியார்களும், 100 வேதபண்டிதர்களும் வரவழைக்கப்பட்டனர்.திருமலை திருப்பதி கோயில் கோபுரம் போன்று திருக்கல்யாண வைபவ மேடை தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 05 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

மாற்று திறனாளிகளுக்கு நுழைவாயில் எண்.6ல் சிறப்பு வழி அமைக்கப்பட்டிருந்து. சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரங்கத்தை சுற்றிலும், தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தது. இரண்டு மருத்துவ மையம் அமைக்கப்பட்டிருந்தது.திருக்கல்யாண வைபவத்தை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்ததாக திருமலை தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

IMG 20220417 WA0044 - 2026
IMG 20220417 WA0040 - 2026
IMG 20220417 WA0047 - 2026
IMG 20220417 WA0038 - 2026
IMG 20220417 WA0045 - 2026
IMG 20220417 WA0048 - 2026
IMG 20220417 WA0036 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories