நம்மாழ்வார் திருவிழா; ஆழ்வார் திருநகரியில் கோலாகலம்!

alwarkurichi nammazwar - 2026

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்; உண்டோ சடகோபர்க்கு ஒப்பு – என்று வைணவ ஆசார்யர் மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தினமாலையில் காட்டுகிறார். அவ்வாறே ஒப்பு அற்ற உயர்வு படைத்தவர் சடகோபராகிய நம்மாழ்வார். ஒப்பு அற்ற உயர்வான நாள், வைகாசி விசாகம்.

நம்மாழ்வார் தம் சீடரான மதுரகவியாழ்வாருக்கு நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் தமிழ்ப் பொருளை நான்கு பிரபந்தங்களாக்கி அருள்கின்றார். அப்போது அவர், மதுரகவிகளை நோக்கி, “திருக்கோளூர்ச் செல்வரே! பர, வியூக, விபவ, அந்தர்யாமி எனும் நான்கு ஸ்வரூபத்தை உடைய எம்பெருமானுக்கு

வேதம், பாஞ்சராத்திரம், இதிகாசம், ஸ்மிருதி முதலியவை தோத்திரங்கள் ஆகின்றன. மரத்தாலும், கற்சிலையாலும் வடிவான அர்ச்சாவதார எம்பெருமானுக்கு வேத அர்த்தங்கள் அடங்கிய தமிழ் மொழியானது துதியாகிறது. கிருத யுகத்தில் தியானத்தாலும், திரேதா யுகத்தில் யோகத்தினாலும், துவாபர யுகத்தில் பூஜையாலும் மனிதன் எந்தப் பலனை அடந்தானோ, அதே பலனை கலியுகத்திலும் எம்பெருமானை தோத்திரம் செய்வதால் அடைகின்றான்.

முன்னர் பகவான் வியாசராகத் தோன்றி, பாரதத்தை எவ்வாறு அருளிச் செய்தாரோ, அதுபோல் இப்போது உலகை உய்விக்கும் பொருட்டு, வேதார்த்தங்கள் அடங்கிய தமிழ் மறைகளை எம் மூலமாகச் செய்தருளினன். நான்கு வேதங்களின் அர்த்தங்கள் அடங்கிய நான்கு பிரபந்தங்களையும் இப்போது என்னிடம் இருந்து கேட்பீராக!” என்று கூறி மழை போலே பிரபந்தங்களை அருளிச் செய்தார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

எனவே தான் நம்மாழ்வார் தமிழ் மறைகள் ஈன்ற முதல் தாய் என்று போற்றப்படுகிறார்.  ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் சாரங்களே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு பிரபந்தங்களாக மலர்ந்தன.

தற்போது ஆழ்வார் திருநகரியில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது.

நம்மாழ்வார் திருநட்சத்திரம் : வைகாசி விசாகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories