நம்மாழ்வார் திருவிழா; ஆழ்வார் திருநகரியில் கோலாகலம்!

alwarkurichi nammazwar - 2026

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்; உண்டோ சடகோபர்க்கு ஒப்பு – என்று வைணவ ஆசார்யர் மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தினமாலையில் காட்டுகிறார். அவ்வாறே ஒப்பு அற்ற உயர்வு படைத்தவர் சடகோபராகிய நம்மாழ்வார். ஒப்பு அற்ற உயர்வான நாள், வைகாசி விசாகம்.

நம்மாழ்வார் தம் சீடரான மதுரகவியாழ்வாருக்கு நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் தமிழ்ப் பொருளை நான்கு பிரபந்தங்களாக்கி அருள்கின்றார். அப்போது அவர், மதுரகவிகளை நோக்கி, “திருக்கோளூர்ச் செல்வரே! பர, வியூக, விபவ, அந்தர்யாமி எனும் நான்கு ஸ்வரூபத்தை உடைய எம்பெருமானுக்கு

வேதம், பாஞ்சராத்திரம், இதிகாசம், ஸ்மிருதி முதலியவை தோத்திரங்கள் ஆகின்றன. மரத்தாலும், கற்சிலையாலும் வடிவான அர்ச்சாவதார எம்பெருமானுக்கு வேத அர்த்தங்கள் அடங்கிய தமிழ் மொழியானது துதியாகிறது. கிருத யுகத்தில் தியானத்தாலும், திரேதா யுகத்தில் யோகத்தினாலும், துவாபர யுகத்தில் பூஜையாலும் மனிதன் எந்தப் பலனை அடந்தானோ, அதே பலனை கலியுகத்திலும் எம்பெருமானை தோத்திரம் செய்வதால் அடைகின்றான்.

முன்னர் பகவான் வியாசராகத் தோன்றி, பாரதத்தை எவ்வாறு அருளிச் செய்தாரோ, அதுபோல் இப்போது உலகை உய்விக்கும் பொருட்டு, வேதார்த்தங்கள் அடங்கிய தமிழ் மறைகளை எம் மூலமாகச் செய்தருளினன். நான்கு வேதங்களின் அர்த்தங்கள் அடங்கிய நான்கு பிரபந்தங்களையும் இப்போது என்னிடம் இருந்து கேட்பீராக!” என்று கூறி மழை போலே பிரபந்தங்களை அருளிச் செய்தார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

எனவே தான் நம்மாழ்வார் தமிழ் மறைகள் ஈன்ற முதல் தாய் என்று போற்றப்படுகிறார்.  ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் சாரங்களே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு பிரபந்தங்களாக மலர்ந்தன.

தற்போது ஆழ்வார் திருநகரியில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது.

நம்மாழ்வார் திருநட்சத்திரம் : வைகாசி விசாகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories