ஆன்மிக கேள்வி பதில்: நமஸ்காரம் என்பதன் உட்பொருள் என்ன?

Published:

samavedam 1pic e1528681369149 - 2026

கேள்வி :- நமஸ்காரம் என்பதன் உட்பொருள் என்ன?

பதில் ;- வேதத்தில் ஐந்து பிரணவங்களைப் பற்றி கூறியுள்ளார்கள். அவை ஓங்காரம், ஸ்வாஹாகாரம், ஸ்வதாகாரம், வஷட்காரம், நமஸ்காரம் என்பவை. ‘நம:’ என்ற சொல் தெய்வத்திற்கு நம் சமர்ப்பணத்தைத் தெரிவிக்கிறது. இது தெய்வத்தை வரவேற்கும் சொல் கூட.

நமஸ்காரத்தைத் தவிர மீதி உள்ள நான்கிற்கும் எப்போது செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் போன்ற பலவித நியமங்கள் உள்ளன. நமஸ்காரம் அத்தகைய நியமங்கள் எதுவுமற்ற ப்ரணவம். ஒரு உயர்ந்த பொருளுக்கு உரிய சிறப்பை உணர்ந்து தலை வணங்குவதே நமஸ்கார பாவனை. தெய்வத்தின் மகிமையை அறிந்து வணங்குகிறோம் என்ற பாவனையே நமஸ்காரத்தின் உட்பொருள்.
வேறொரு பொருளில், ‘மன:’ என்ற சொல்லே ‘நம:’ என்று ஆனது. இதனை ‘வர்ண விபர்யய நியாயம்’ என்பர். மனதை சம்ர்பிப்பது என்றால் அகங்காரத்தை தியாகம் செய்வது. எனவே அகங்காரத்தை தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்வதே இதன் உட்பொருள்.

சிறிது சிறிதாக இந்த பாவனை அகம் என்பதை பிரம்மத்தோடு லீனம் செய்யக் கூடிய கைவல்ய நிலைக்கு காரணமாகும். எனவேதான் நமஸ்காரத்திற்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

***

ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img