நவராத்திரியில் அகண்ட தீபம் ஏன்?

temple deepam - 2026

கேள்வி:- நவராத்திரி ஒன்பது நாட்களும் தொடர்ந்து எரியும்படி அகண்ட தீபம் ஏற்றுவதால் என்ன பலன்?

பதில்:- நவராத்திரி ஒன்பது நாட்களும் அணையாமல் எரியும் அகண்ட தீபம் அனைவரும் ஏற்றத் தான் வேண்டும் என்ற நியமம் எதுவும் இல்லை. ஆனால் அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவதும் ஒரு சம்பிரதாயம்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட கலசம் அல்லது மண்டபத்துடன் அகண்ட தீபமும் ஏற்றி வைத்து வழிபடுவார்கள். தகுந்த ஏற்பாட்டுடன் அதனை ஜாக்கிரதையாகச் செய்வது நல்லது. ஒன்பது நாட்களும் அது அணையாமல் பாதுகாக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கையும் சூழலும் வசதியும் இருப்பவர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம்.

பூஜைகளில் தீபம் ஏற்றுவதும் முக்கிய உத்தேசம் என்ன வென்றால் தெய்வங்களின் சக்தியை அங்கு ஆவாஹனம் செய்வதே. ஏனென்றால் தெய்வங்கள் பிரகாச வடிவினர். ஒளி வடிவம் உடையவர்கள். ஒளி சொரூபமுள்ள தேவதைகள் அங்கு வர வேண்டுமென்றால் அங்கு ஒளி ரூபம் கொண்ட ஜோதி இருக்க வேண்டும். அதனால் தான் பூஜைக்கு முன் தீபம் ஏற்றுகிறோம். பூஜையின் நடுவிலும் தீபம் ஏற்றுகிறோம். பூஜை பூர்த்தியானபின் நீராஜனம் என்ற கற்பூர ஆர்த்தியின் போதும் ஜோதியை காண்பிக்கிறோம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

ஒன்பது நாட்கள் தொடர்ந்து செய்யும் நவராத்திரி பூஜை தடையின்றி நடைபெறுவதற்காக அகண்ட தீபம் ஏற்றி வழிபடுகிறோம். அதோடு கூட நம்முடைய சங்கல்பம் அகண்டமாக விருத்தியடைய வேண்டும், வெற்றியடைய வேண்டும் என்ற நம்பிக்கையிலும் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. அகண்ட தீபத்தின் மூலம் அனைத்து வித தோஷங்களும் விலகி ஆயுள் விருத்தியும் ஆரோக்கிய விருத்தியும் கிடைக்கப் பெறுகிறோம்.

அந்த ஜோதி ரூபத்தில் ‘லோகைக தீபாங்குரா’ வாகிய அம்பாளை ஒளி வடிவத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறோம். அந்த தீப ஜோதியில் ஒன்பது நாட்களும் அம்பாள் அசையாமல் நின்று நம் பூஜையை ஏற்கிறாள். ‘லோகைக தீபங்குரா!’ என்று துதிக்கப்படும் ஜோதி சொரூபத்திற்கு குறியீடாகவே நாம் அகண்ட தீபத்தை ஏற்றி வணங்குகிறோம்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories