நவராத்திரியில் அகண்ட தீபம் ஏன்?

Published:

temple deepam - 2026

கேள்வி:- நவராத்திரி ஒன்பது நாட்களும் தொடர்ந்து எரியும்படி அகண்ட தீபம் ஏற்றுவதால் என்ன பலன்?

பதில்:- நவராத்திரி ஒன்பது நாட்களும் அணையாமல் எரியும் அகண்ட தீபம் அனைவரும் ஏற்றத் தான் வேண்டும் என்ற நியமம் எதுவும் இல்லை. ஆனால் அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவதும் ஒரு சம்பிரதாயம்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட கலசம் அல்லது மண்டபத்துடன் அகண்ட தீபமும் ஏற்றி வைத்து வழிபடுவார்கள். தகுந்த ஏற்பாட்டுடன் அதனை ஜாக்கிரதையாகச் செய்வது நல்லது. ஒன்பது நாட்களும் அது அணையாமல் பாதுகாக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கையும் சூழலும் வசதியும் இருப்பவர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம்.

பூஜைகளில் தீபம் ஏற்றுவதும் முக்கிய உத்தேசம் என்ன வென்றால் தெய்வங்களின் சக்தியை அங்கு ஆவாஹனம் செய்வதே. ஏனென்றால் தெய்வங்கள் பிரகாச வடிவினர். ஒளி வடிவம் உடையவர்கள். ஒளி சொரூபமுள்ள தேவதைகள் அங்கு வர வேண்டுமென்றால் அங்கு ஒளி ரூபம் கொண்ட ஜோதி இருக்க வேண்டும். அதனால் தான் பூஜைக்கு முன் தீபம் ஏற்றுகிறோம். பூஜையின் நடுவிலும் தீபம் ஏற்றுகிறோம். பூஜை பூர்த்தியானபின் நீராஜனம் என்ற கற்பூர ஆர்த்தியின் போதும் ஜோதியை காண்பிக்கிறோம்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

ஒன்பது நாட்கள் தொடர்ந்து செய்யும் நவராத்திரி பூஜை தடையின்றி நடைபெறுவதற்காக அகண்ட தீபம் ஏற்றி வழிபடுகிறோம். அதோடு கூட நம்முடைய சங்கல்பம் அகண்டமாக விருத்தியடைய வேண்டும், வெற்றியடைய வேண்டும் என்ற நம்பிக்கையிலும் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. அகண்ட தீபத்தின் மூலம் அனைத்து வித தோஷங்களும் விலகி ஆயுள் விருத்தியும் ஆரோக்கிய விருத்தியும் கிடைக்கப் பெறுகிறோம்.

அந்த ஜோதி ரூபத்தில் ‘லோகைக தீபாங்குரா’ வாகிய அம்பாளை ஒளி வடிவத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறோம். அந்த தீப ஜோதியில் ஒன்பது நாட்களும் அம்பாள் அசையாமல் நின்று நம் பூஜையை ஏற்கிறாள். ‘லோகைக தீபங்குரா!’ என்று துதிக்கப்படும் ஜோதி சொரூபத்திற்கு குறியீடாகவே நாம் அகண்ட தீபத்தை ஏற்றி வணங்குகிறோம்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img