நவராத்திரியில் அகண்ட தீபம் ஏன்?

temple deepam - 2026

கேள்வி:- நவராத்திரி ஒன்பது நாட்களும் தொடர்ந்து எரியும்படி அகண்ட தீபம் ஏற்றுவதால் என்ன பலன்?

பதில்:- நவராத்திரி ஒன்பது நாட்களும் அணையாமல் எரியும் அகண்ட தீபம் அனைவரும் ஏற்றத் தான் வேண்டும் என்ற நியமம் எதுவும் இல்லை. ஆனால் அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவதும் ஒரு சம்பிரதாயம்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட கலசம் அல்லது மண்டபத்துடன் அகண்ட தீபமும் ஏற்றி வைத்து வழிபடுவார்கள். தகுந்த ஏற்பாட்டுடன் அதனை ஜாக்கிரதையாகச் செய்வது நல்லது. ஒன்பது நாட்களும் அது அணையாமல் பாதுகாக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கையும் சூழலும் வசதியும் இருப்பவர்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம்.

பூஜைகளில் தீபம் ஏற்றுவதும் முக்கிய உத்தேசம் என்ன வென்றால் தெய்வங்களின் சக்தியை அங்கு ஆவாஹனம் செய்வதே. ஏனென்றால் தெய்வங்கள் பிரகாச வடிவினர். ஒளி வடிவம் உடையவர்கள். ஒளி சொரூபமுள்ள தேவதைகள் அங்கு வர வேண்டுமென்றால் அங்கு ஒளி ரூபம் கொண்ட ஜோதி இருக்க வேண்டும். அதனால் தான் பூஜைக்கு முன் தீபம் ஏற்றுகிறோம். பூஜையின் நடுவிலும் தீபம் ஏற்றுகிறோம். பூஜை பூர்த்தியானபின் நீராஜனம் என்ற கற்பூர ஆர்த்தியின் போதும் ஜோதியை காண்பிக்கிறோம்.

ஒன்பது நாட்கள் தொடர்ந்து செய்யும் நவராத்திரி பூஜை தடையின்றி நடைபெறுவதற்காக அகண்ட தீபம் ஏற்றி வழிபடுகிறோம். அதோடு கூட நம்முடைய சங்கல்பம் அகண்டமாக விருத்தியடைய வேண்டும், வெற்றியடைய வேண்டும் என்ற நம்பிக்கையிலும் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. அகண்ட தீபத்தின் மூலம் அனைத்து வித தோஷங்களும் விலகி ஆயுள் விருத்தியும் ஆரோக்கிய விருத்தியும் கிடைக்கப் பெறுகிறோம்.

அந்த ஜோதி ரூபத்தில் ‘லோகைக தீபாங்குரா’ வாகிய அம்பாளை ஒளி வடிவத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறோம். அந்த தீப ஜோதியில் ஒன்பது நாட்களும் அம்பாள் அசையாமல் நின்று நம் பூஜையை ஏற்கிறாள். ‘லோகைக தீபங்குரா!’ என்று துதிக்கப்படும் ஜோதி சொரூபத்திற்கு குறியீடாகவே நாம் அகண்ட தீபத்தை ஏற்றி வணங்குகிறோம்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories