குமரிக் கோட்டத்து காளி மலை! புனிதத் தலம் மனிதருக்காக!

kumari kalimalai3 - 2026தென் இந்தியாவின் புண்ணிய தலம் காளி மலை – தமிழகத்தின் தென்கோடி கன்யாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு தாலுகாவில் கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில், மலையின் மீது பொங்கலிடும் ஒரே இடம் தென்னிந்தியாவின் புண்ணிய தலம் காளிமலை.

இம்மலையில் தவம் செய்த அகஸ்திய முனிவருக்கு மூம்மூர்த்திகள் காட்சி அளித்த பெருமை காளிமலையை சாரும்! முனிவரின் தவத்தில் தோன்றிய வற்றாத நீரூற்று காளி தீர்த்ததாக இன்றும் சுரந்து கொண்டு இருக்கிறது.

kumari kalimalai5 - 2026

மருத்துவ குணம் கொண்ட இந்த நீரை நோய் தீர்க்கும் மருந்தாக கங்கை நீரை போன்று பக்தர்கள் வீடுகளில் பாதுகாத்து வருகிறார்கள். இப்புனித மலையில் ஸ்ரீ துர்கா தேவி, ஸ்ரீ தர்ம சாஸ்தா நாகயக்க்ஷி, ஆகியோர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். குழந்தை பேறு கிடைக்காதவர்கள் குழந்தை கிடைப்பதற்காக இம்மலையில் வந்து நாகயக்ஷிக்கு பூஜை செய்து அருள் பெற்று செல்கின்றனர்.

kumari kalimalai4 - 2026

காளி மலையில் அந்நூரி நெல் என்ற அற்புத நெல் இருக்கிறது, காலையில் பூத்து மதியம் கதிராகி மாலையில் சூரியன் மறையும் முன்பாக நெல்லாக உதிர்ந்து போவது தான் இந்த அந்நூரி நெல்லின் சிறப்பு. இந்த நெல்லை உதிர்த்து பக்தர்கள் கொண்டு வரும் அரிசியும் சேர்த்து தேவிக்கு பொங்கலிடுவது பழங்கால வழக்கம்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.2 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பொங்கல் இடும் போது பொங்கல் பானையில் இருக்கும் அரிசி முழுவதும் பொங்கலையாக வெளியேறுவதை பார்க்கலாம்! இதை தேவி மனம் மகிழ்ந்து ஏற்று கொண்டாதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

kumari kalimalai6 - 2026

கன்யாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதியான கடையாலுமூடு பேரூராட்சி பத்துகாணிக்கு அண்மையில் தான் வரம்பொதி மலை என்ற காளிமலை தேவியின் இருப்பிடமாகத் திகழ்கிறது.

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா மஹாராஜாவை கொல்ல வேண்டும் என்ற நோக்குடன் எதிரிகள் துரத்தி வந்த போது இம்மலையில் இருக்கிற சூலம் குத்தி பாறை அடிவாரத்தில் வனவாசிகளுடன் தங்கினார்! அப்போது,  மன்னரை காப்பாற்ற வனபாலகானாக காட்சியளித்த ஸ்ரீ தர்மசாஸ்தா எதிரிகளிடம் இருந்து மன்னரை காப்பாற்றினார்!

kumari kalimalai1 - 2026

இதனால் மனம் மகிழ்ந்த மன்னர் கோவிலைப் புனரமைப்பதற்காக 600 ஏக்கர் நிலத்தை வரியில்லா பூமியாக செம்பு பட்டயம் வழங்கியும் பத்து (10)காணி இன மக்களை குடியமர்த்தி கோவிலை பராமரிப்பதற்கும் உத்தரவிட்டார் என்பது சரித்திரச் செய்தி.

மேற்குத் தொடர்ச்சி மலைகளும், பேச்சிபாறை, சிற்றாறு-1, சிற்றாறு – 2, நெய்யாறு அணைகளும் இம்மலையில் இருந்து பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது!

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

சூரிய அஸ்தமனக் காட்சியை இம்மலையில் இருந்து தெளிவாகப் பார்த்து ரசிக்கலாம்! இவ்வளவு பெருமை வாய்ந்த காளிமலை கோவிலில் தரிசனம் செய்வது நமது வாழ்வில் முன்னேற்றம் தரும் !

kumarikalaimalai22 - 2026

வருடம் தோறும் சித்திரை பெளர்ணமி அன்று பகலில் தமிழக கேரள பக்தர்களால் பொங்கலிட்டு கருட தரிசனம் கண்டு பக்தர்கள் காளி தேவியின் அருள் பெறுகிறார்கள்!

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் காலை 06.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடை திறந்து வழிபாடுகள் நடைபெறும்!

ஒவ்வொரு மாதம் பெளர்ணமி தினத்தன்றும் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும்
மாலை திருவிளக்கு பூஜையும் நடை பெறும்.

– நாஞ்சில் ராஜா, காளிமலை சேவா சமிதி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories