“எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?” – பெரியவா

“எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?” – பெரியவா
 
31530531 1949610665084089 1572552758752444416 n - 2026
(குழம்பின தொண்டர்களுக்கு-அரளி புஷ்பத்துக்கு தெலுங்கு மொழியில் ‘ஸ்வர்ண கண்டா’ என்று பெயர்.சம்ஸ்கிருதத்தில் ‘ஸ்வர்ண புஷ்பம்’-என்றும் பெயர்-பெரியவா)
 
 
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-170-A
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
 
 
ஒரு நாள் தரிசனம் கொடுப்பதற்காக வெளியே வந்து அமர்ந்தார்கள், பெரியவாள்.
 
சில பக்தர்கள் பழம் – மலர்த் தட்டுகளை வைத்து வந்தனம் செய்து கொண்டார்கள்.
 
பெரியவாள் கையைச் சொடுக்கி ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டு, “எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?” என்று கேட்டார்கள்.
 
தொண்டர்களுக்கு விளங்கவில்லை.தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுக்கும் அன்பர் யாரையும் அவர்கள் பார்த்ததில்லை.
 
தற்செயலாக, அந்த சமயம் ஒரு முதலியார் தரிசனத்துக்கு வந்தார். உள்ளூர்க்காரர் .அநேகமாக நாள்தோறும் வருபவர். வந்தவர் நேரே பெரியவாளிடம் சென்று, தங்க அரளி மாலையைச் சமர்ப்பித்தார். பெரியவாள் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தலையில் வைத்துக் கொண்டார்கள்.
 
தெலுங்கு மொழியில், இந்த புஷ்பத்துக்கு ‘ஸ்வர்ண கண்டா’ என்று பெயர் .சம்ஸ்கிருதத்தில் ‘ஸ்வர்ண புஷ்பம்’ என்று நேரடி மொழி பெயர்ப்பாகக் கூறுவதுண்டு.
 
பெரியவாள் தொண்டர்களைப் பார்த்து;
 
” இந்த முதலியார் தினமும் எனக்கு இந்த புஷ்பத்தை (தங்க அரளி) கொண்டு வந்து கொடுக்கிறார். அதை நானே ஏற்றுக் கொள்கிறேன் ..சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையில்இதைச் சேர்த்துக்கொள்வதில்லை.
 
ஏன் தெரியுமோ? ஈஸ்வரனுக்கு, நிஜமாக ஸ்வர்ண புஷ்பம் சமர்ப்பிக்க வேண்டுமே தவிர, டூப்ளிகேட் புஷ்பம் சமர்ப்பிக்க எனக்குச் .சம்மதமில்லை. சாக்ஷாத் ஸ்வர்ண புஷ்பம் இருந்தால் சமர்ப்பிக்கலாம்”.
 
முதலியாருக்கு,சந்திரமௌலீஸ்வரரைக் காட்டிலும், பெரியவாளிடம் நிரம்ப பக்தி. தான் கொண்டு வந்து கொடுக்கும் தங்க அரளிப் புஷ்பத்தைத் தன் சிரசில் பெரியவாள் வைத்துக் கொள்வதைப் பார்த்துப் பரவசப்பட்டுப் போவார்.
 
பின்னர், ஒரு சூட்சுமமும் தெரிந்தது. பால் உள்ள புஷ்பங்களை பகவானுக்கு சமர்ப்பிக்கக் கூடாது என்று ஒரு சம்பிரதாயம் இருக்கிறதாம்.அந்த சம்பிரதாயத்துக்கு மதிப்புக் கொடுத்துத்தான் ,பெரியவாள் இப்படி செய்தார்களோ?
 
அன்பர் மனம் நோகாத அருள்வழி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories