காமாட்சி பார்த்துக் கொள்வாள் கவலையை விடு – பெரியவா!

“காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு” -பெரியவா

( இந்த வகை நம்பிக்கையைத்தான், ‘நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்றனர் சான்றோர்.)

19059744 1596770400368119 8664418595669274017 n 1 - 2026
நன்றி-பாலஹனுமான்.-2014-ம் ஆண்டு

ஒரு கிராமத்தில் பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். துடைத்துப் போட்ட மாதிரி, எல்லா உணவுப் பொருட்களும் தீர்ந்துவிட்டிருந்தன. காரியதரிசியும், பரிசாரகரும் (சமையல் செய்பவர்) பெரியவரிடம் வந்து தெரிவித்தனர்.

இன்று இரவுப் பொழுதை எப்படியாவது கடத்தி விடலாம். நாளைக்கு மடத்தில் தம்பிடிகூட அரிசி பருப்பில்லை” என்ற அவர்கள் குரலில் பெரும் வருத்தம்.

ஆனால், பெரியவர் அதைக்கேட்டு வருத்தப்படவில்லை.

‘அப்படியா?’ என்று, மற்ற விஷயங்களைச் சொல்லும்போது கேட்டுக் கொள்வது போலதான் கேட்டுக்கொண்டாராம்!

அவர்களுக்கோ, ‘என்ன இப்படி இருக்கிறார். காஞ்சிபுரத்துக்கோ, இல்லை பெரியவர் சொன்னால், செய்ய தயாராக உள்ள தனவான்களுக்கோ, தகவல் அனுப்பினால் அல்லவா, இந்த சிக்கலில் இருந்து மீள முடியும்’ என்று கவலை.

நன்றாகக் கவனியுங்கள். இவர்களும் அம்பாள் பார்த்துக்கொள்வாள் என்று நினைக்கவில்லை. நினைக்கவும் முடியாது. ஏனென்றால், இது விஞ்ஞான காலம். அற்புதங்கள் எல்லாம் கதை கட்டுரைகளில்தான் சாத்தியம் என்கிற அளவுக்கே நம் நம்பிக்கையின் வீர்யம் உள்ளது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 1 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

ஆனால், பெரியவரோ, “காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு” என்று கூறிவிட்டு, தியானத்தில் உட்கார்ந்து விட்டாராம்.
அவர்களால் பெரியவரிடம் போய் மல்லுக்கு நிற்க முடியவில்லை. பதட்டத்தோடு பொழுதும் விடிந்தது. அதிசயம் போல, ஒரு வண்டி நிறைய அரிசி, பருப்பு, காகறிகள், பழம் என்று வந்து இறங்கியது. ‘யார் அனுப்பினார்கள் இதை?’ என்ற கேள்விக்குக் கிடைத்த விடையில்தான், அற்புதங்கள் இந்த நாளிலும் நடக்க முடியும் என்பதற்கான விஷயம் உள்ளது.

பக்கத்து கிராமத்தில் ஒரு திருமணம் நடக்க இருந்தது. அந்த திருமண விருந்துக்கான உணவுப் பொருட்கள்தான் அவை எல்லாம். ஆனால், கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளைப் பையனுக்கு அம்மை போட்டதில் கல்யாணம் செய்ய முடியாத நிலை. வாங்கிவிட்ட அவ்வளவையும் என்ன செய்வது? என்று யோசித்தபோது, மடம் வந்து முகாமிட்டிருப்பது, அந்தத் திருமண வீட்டைச் சேர்ந்த பெரியவருக்கு தெரிய வந்தது. மடத்தில் தினமும் அன்னபோஷணம் நடப்பதை தெரிந்து வைத்திருந்த அவர், இதை மடத்துக்கு கொடுத்துவிடுவோம். வீணாகாமல் நல்ல விதமாய் பயன்படும் என்று கருதி, வண்டியோடு அவ்வளவு சரக்கையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.

ALSO READ:  பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

மூட்டையில் அரிசி, கூடைகூடையாக காய்கறி, பழங்கள், பருப்பு, எண்ணெய் என்று சகலமும் வந்து இறங்கியதைப் பார்த்த காரியதரிசியும் பரிசாரகரும் திகைத்துப்போய், பெரியவரிடம் கூறவும் சிரித்த பெரியவர், காமாட்சி பாத்துப்பானப்போ உனக்கு என் மேல கோபம் கூட வந்துருக்கும். ஆனால், இப்ப என்ன சொல்றே?” என்று கேட்டாராம். அவர்களால் பதிலுக்கு என்ன சொல்ல முடியும், சிலிர்ப்பதைத் தவிர…!

ஒரு விஷயத்தில் குழப்பமே இல்லாமல், நூறு சதவிகிதம் நம்புவது என்பதில் தான் அற்புதங்கள் நிகழ்கின்றன.

இந்த வகை நம்பிக்கையைத்தான், ‘நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்றனர் சான்றோர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories