அவலின் சக்தி அல்ல, ஆன்மாவின் சக்தி.
(- கண்ணதாசன், (இன்று பிறந்த நாள்) அர்த்தமுள்ள இந்து மதத்தில்.)

காஞ்சி பெரியவர்களிடம் அதுவும் இருக்கிறது. உண்மையான மேதைக்கு வேண்டிய அடக்கமும் இருக்கிறது. பற்றற்ற ஞானமும், பரமார்த்திக நிலையும் இருக்கின்றன . ‘எல்லோராலும் முடியாது’ என்று சொல்லக்கூடிய வாழ்க்கை நிலை இருக்கிறது. லௌகீக வாழ்க்கையை முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் தெளிந்த உணர்விருக்கிறது. கடலிலேயே கருங்கடல், அரபிக்கடல் என்றிருப்பதை போல, இந்த கடலும் ஞான கடல், பக்தி கடல், யோகக்கடல். கைப்பிடி அவலிலும், ஆழாக்கு பாலிலும் ஒரு ஜீவன் காதகாதங்கள் நடந்தே போக முடிகிறது என்றால், அது அவலின் சக்தி அல்ல, ஆன்மாவின் சக்தி.

