December 6, 2025, 1:52 AM
26 C
Chennai

சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹாபெரியவா

“நீங்கள் எல்லாருமே திருடாள்!”
29597893 1909282189116937 5949859707875495344 n 3 - 2025

(“ஸ்ரீ’க்கு இவ்வளவு அர்த்தமா?)

 

(சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு தன் நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹா பெரியவா)

 

“சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்” என்ற தொடரில்- ;ரா.கணபதி
.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

2013 போஸ்ட்-மறுபதிவு.

 

குருநாதன் முகத்தில் குறும்பு நகை .விளையாட்டுப்பிள்ளை போல் கண்களில் ஓர் ஒளி.எதிரே இருந்தவரிடம் கேட்கிறார்; “இப்போ இங்கே இருந்து போறானே,அவன் பேர் என்ன?”

 

“ஸ்ரீகண்டன்”

 

“இல்லை,அப்படிச் சொன்னால் ஸர்க்கார்அபிப்பிராயத்துக்கு விரோதமாயிடும்.”

 

ஏன் என்று புரியாமல் அடியார் விழிக்கிறார். அவரை விழிக்க விட்டு சிறிது வேடிக்கை பார்த்த பின்பெரியவாள் சொல்கிறார். “திருக்கண்டன்-னுசொன்னாத்தான் ராஜாங்கத்தார் ஒப்புக்கொள்வர்.”

அடியாருக்குப் புரிந்து விடுகிறது பெரியவாளோடு சேர்ந்து அவரும் சிரிக்கிறார். ‘ஸ்ரீ’ என்று வருமிடத்திலெல்லாம் ‘திரு’ என்று மாற்ற வேண்டும்; ஸ்ரீரங்கம்,ஸ்ரீபெரும்பூதூர் போன்ற பெயர்களைத்திருவரங்கம்,திருப்பெரும்பூதூர் என்றே இனி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அன்று காலைதான் செய்தி வெளியாகியிருந்தது. அதனால் ‘ஸ்ரீகண்டன்’ என்று மட்டும் சொல்லலாமா? பெரியவாள்,

பெரியவாள், “இந்த இடத்திலே ஸ்ரீகண்டனை திருக்கண்டன்-னு சொல்றது தப்பு; தெரியுமோ?” என்று கேட்கிறார். அது எப்படித் தப்பு என்பதையும் விளக்குகிறார்.

“ஸ்ரீ என்றால் லக்ஷ்மி என்று மாத்திரம் நினைத்துக்கொண்டு,’ஸ்ரீ’யைத் ‘திரு’ ஆக்கு என்கிறார்கள். ஆனால் ‘ஸ்ரீ’ என்பதற்கு வேறே பல அர்த்தங்களும் உண்டு. பாம்பு,பாம்பின் விஷம் இதற்கெல்லாங்கூட ‘ஸ்ரீ’ என்று பெயர்.’மங்கள காரியங்களுக்கு உதவாத செவ்வாய்க் கிழமைக்கு ‘மங்களவாரம்’ என்று பெயர் வைத்த மாதிரி பாம்பை ‘ஸ்ரீ’ என்று சொல்வதுண்டு.

 

“‘ஸ்ரீகண்டன்’ என்றால் லக்ஷ்மியைக் கண்டத்தில்(கழுத்தில்) வைத்துக் கொண்டிருக்கிற மஹா விஷ்ணு என்று அர்த்தமில்லை. மஹாவிஷ்ணு லக்ஷ்மியை வக்ஷ்ஸ்தலத்தில் (மார்பில்)தான் வைத்துக் கொண்டிருக்கிறாரே தவிரக் கண்டத்திலே அல்ல. ஸ்ரீகண்டன் என்றால் ஸரியான அர்த்தம், ஸ்ரீ என்கிற பாம்பைக் கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கிற அல்லது ஆலஹால விஷத்தைக் கழுத்தில் வைத்துக்கொண்டிருக்கிற நீலகண்டனான பரமசிவன் என்பதே.

 

இப்படி அறிவுச்சுடர் தெறித்த பெரியவாளின் முகத்தில் மறுபடியும் நகைச் சுவையின் பச்சொளிமேவியது.

 

“திருக்கண்டனோ இல்லையோ, அவன் திருடன்”என்றார். மேலும் பரபரப்பூட்டும் விதத்தில்,

 

“நீங்கள் எல்லாருமே திருடாள்!” என்றார்.”புரியவில்லையா? சீமான்,சீனிவாஸன்-னு எல்லாம் சொல்கிறது எதை? ஸ்ரீமான்,ஸ்ரீனிவாஸன் என்பதைத்தானே? ‘ஸ்ரீ’ தமிழில் ‘சீ” ஆகுமென்றால் “சீ”யை யெல்லாமும் இனிமேல் ‘திரு’ என்றுதானேசொல்லணும்?
என்னை ‘ஜகத்குரு’ என்று டைட்டில் கொடுத்துவைத்திருக்கிறீர்களோல்லியோ? அதனால் நீங்களெல்லாம் என் சீடர்கள்;சீ-டர்கள்;அதாவது திரு-டர்கள்.”
விழுந்து விழுந்து சிரிக்கிறார்.அவர் மட்டுமா?அத்தனை பேருமே!
ஆனால் சிரிப்பிலேயே இதுபோன்ற மொழிபெயர்ப்புகளைக் குறித்து அவர்கள் சிந்தனையைச் சிறக்கவும் வைத்து விடுகிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories