December 6, 2025, 3:14 PM
29.4 C
Chennai

ராஜபாளையம்- ஆஞ்சநேயர் கோயில்களில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா..

1500x900 1444251 screenshot20220102153854 - 2025

ராஜபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நாளை மார்கழி அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உளள நிலையில் ராஜபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது.
  கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நாளை அதிகாலை 4 மணி முதல் கும்ப ஜெபம், கணபதி ஹோமம், ஆஞ்சநேய ஹோமம் ,16 வகை அபிஷேகங்கள் தீப ஆராதனைகள் விநாயகர் மற்றும் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு நடைபெறும்.
அஷ்ட வரத ஆஞ்சநேயர் பின்னர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கவசத்தில் காலை முதல் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

மாலை 3மணிக்கு கும்பஜெயம் 108திரவிய ஹோமம் நடத்தி சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும்.
மேலும் இந்த கோவிலுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அன்னதானம் நாள் முழுவதும் வழங்கப்படும்.
நிகழ்ச்சிக் காண ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

மேலும் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அசையாமணி விலக்கு பகுதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 10 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலைக்கு வெற்றிலை துளசி, மாலை அணிவித்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வை யொட்டி நடைபெறும்.

மேலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் ராம பக்த ஆஞ்சநேயருக்கு ராஜ தீபாராதனை வழிபாடு நடைபெறும்.
நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்வார்கள்.
மேலும் நாளை இந்த கோவிலில் ஐந்து அலங்காரங்களில் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பம்சமாகும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்து சுவாமிகள் செய்து வருகிறார்.

இதுபோல் ராஜபாளையம் கோதண்டராமசாமி கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அஸ்டாபிஷேகம் சிறப்பு அலங்காரம் வடமாலை சாற்றி தீபாராதனை வழிபாடு விமர்சையாக நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்க கோவில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

ராஜபாளையம் சம்மந்தபுரம் சோலைமலை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடைபெறும் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் செல்லும் வழியில் உள்ள சாய்பாபா கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை வழிபாடுகள் விமர்சனையாக நடைபெறும் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories