திருப்புகழ் கதைகள்: மயிலுமாடி நீயுமாடி வரவேணும்!

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 276
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

எந்தத் திகையினும் – சுவாமி மலை
மயிலுமாடி நீயுமாடி வரவேண்டும்

சம்பந்தாண்டான் அருணகிரியாரிடம் பிரபுட தேவ மாராயன் அரசவையில் – என் மந்திர பலத்தால் அழைத்தால் காளிதேவி என் முன் பிரசன்னமாவாள்… அதுபோல நீர் உமது முருகனை வரவழைத்துக் காட்ட முடியுமா? மன்னர் பிரானுக்கு தரிசனம் செய்து வைக்க முடியுமா?’ என்று பெரும் குரலில் கொக்கரித்தான்.

மன்னன் பிரபுட தேவனுக்கோ இவர்கள் போட்டியின் காரணமாய்த் தனக்குக் காளியின் தரிசனமும் முருகனின் தரிசனமும் கிட்டும் என்று மகிழ்ந்து இந்தப் போட்டியை ஊக்குவித்தான். அருணகிரிநாதரும் இதற்கு இணங்கினார்.

சம்பந்தாண்டான் அந்த இரவு முழுவதும் உறங்கவில்லை. இரவு முழுவதும் விழித்திருந்து அபிசார ஹோமம் செய்து உரத்த குரலில் மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவன் வழிபடும் காளிதேவி பிரசன்னமாகவில்லை. சம்பந்தாண்டான் தோல்வியுற்றதை அடுத்து மன்னன் தனது பரிவாரங்கள் பின்தொடர திருவண்ணாமலை கோயிலினுள் தியானத்தில் ஈடுபட்டிருந்த அருணகிரிநாதர் முன் சென்று பணிந்து, “பெருமானே! காளி தேவியைத் தருவித்துக் காட்டுவேன் என்று சூளுரைத்த சம்பந்தாண்டான் தோல்வியுற்றனன். கருணைகூர்ந்து தாங்கள் கந்தபெருமானை வரவழைத்து நாங்கள் உய்யும் பொருட்டு காட்டியருள வேண்டும்” என்று வேண்டினான்.

அருணகிரியாருக்கு உள்ளத்தே அசைக்கவே முடியாத ஓர் உறுதி உண்டு. குமரகுருபரர் சொல்லியது போல,

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்

பல்கோடி விக்கினமும் பல்பிணியும் – பல்கோடி 111

பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்

பூதமுதீ நீரும் பொருபடையும் – தீது அகலா 112

வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்

எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் – அவ்விடத்தில் 113

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்

அச்சம் அகற்றும் அயில்வேலும் – கச்சைத் 114

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு

அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் – விரிகிரணம் 115

சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்

எந்தத் திசையும் எதிர்தோன்ற –

என்பது போல, கந்தவேளை எந்த வேளையுங் காணலாம். எங்கே நினைக்கினும் அங்கே என்முன் வந்து எதிர்நிற்பன் என்னப்பன் என்று அருணகிரியார் நினைத்தார்.

மன்னன் வேண்டியவுடன் சிவகங்கையில் முழுகி, அங்கே கரையில் இருக்கும் பதினாறுகால் மண்டபத்தில் ஒரு தூண் அருகில் நின்று கண்மூடி தியானித்து உள்ளம் உருக வேண்டினார். “பெருமானே! முன் ஒருமுறை பிரகலாதர் பொருட்டுத் திருமால் தூணிலிருந்து வெளிப்பட்டார். இப்போது எளியேன் என் பொருட்டு கருணையே வடிவான தேவரீர் இத்தூணிலிருந்து வெளிப்பட்டு எங்களை உய்விக்க வேண்டும்” என்று துதித்தார்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

“எந்தத் திசையினும்’, “கொடிய மறலியும்’, “இருவர் மயலோ! என்ற திருப்புகழ் பாடல்களை அமுதினும் இனிய குரலில் உள்ளமுருகப் பாடினார். எனினும் முருகவேள் காட்சி தரவில்லை. “என் முருகன் கைவிட மாட்டானே, வராது இருப்பதற்கு யாது காரணம்?’ என்று மயங்கிய அருணகிரிநாதர் அடுத்த கணமே ஆழ்நிலை தியானத்திற்குச் சென்றார். அப்போது அவர் கண்ட காட்சி…

சுற்றிலும் பணிப்பெண்கள் ஏதோ பேசிச் சிரிக்க, உமா தேவியார் முருகனைத் தன் மடியில் இறுக அமர்த்திப் பிடித்துக் கொண்டு ஏதோ வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார். முருகனுக்கோ தன் பக்தன் வேண்டுவது காதில் விழுகிறது.

உடனே, அன்னையின் மடியிலிருந்து திமிறி எழ முயல்கின்றார். ஆனால் அன்னை பிடித்திருந்த பிடியோ இளகுவதாகத் தெரியவில்லை. இதனைக் கண்ட அருணகிரியாருக்கு இது எதனால் என்பதும் ஞானதிருஷ்டியில் தெரிந்துவிட்டது. எல்லாம் சம்பந்தாண்டானின் வேலை.

காளிதேவி அன்னை உமாதேவியின் ஓர் அம்சம் அல்லவா? அதனால் காளி வந்து தரிசனம் தரவில்லை என்றாலும் எப்படியாவது முருகனை வரவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்று வேண்ட, காளியும் உமாதேவியிடம் முருகனைத் தன் மடியில் சிறிதுகாலம் வைத்திருக்க வேண்டுகிறாள்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

முருகனை அன்னையின் பிடியிலிருந்து விடுவிப்பது எப்படி? முருகன் திருவருளால் அவருக்கு ஒரு யோசனை பளீர் என்று உதித்தது. முருகன் ஏறி வறுகின்ற அவன் வாகனமான மயில் உமாதேவியாரின் அருகில் நின்றபடி கீழே எதையோ கொத்தித் தின்று கொண்டிருந்தது. மயிலைக் கண்டதும் உடனே அந்த மயில் மீது ஓர் இனிய பாடலை இசைத்தார்.

அந்தப் பாடல் என்ன? அந்த மயில் என்ன செய்தது? நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories