February 22, 2026, 7:33 PM
29 C
Chennai

சபரிமலை சரண கோ‌ஷத்தால் ஒலி மாசு குறித்த இணைய தளங்களில் வெளியான தகவல் உண்மை கிடையாது…!.

sabrimali - 2026

சபரிமலையில் பக்தர்கள் கோஷத்தால் ஒலி மாசு ஏற்படுவதாக, கேரள வனத்துறை அறிக்கை அளித்துள்ளதாக இணைய தளங்களில் வெளியான தகவல் பற்றி விசாரணைக்கு கேரள வனத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

சரண கோ‌ஷத்தால் ஒலி மாசா? – இணையதளத்தில் வெளியான தகவல் பற்றி விசாரணைக்கு மந்திரி உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோவில்

கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இங்கு நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மற்றும் மாதாந்திர பூஜைகளின்போது ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி, ‘சுவாமியே சரணம் ஐயப்பா…..’ என்ற சரண கோ‌ஷம் முழங்க நடந்து செல்வார்கள்.

சபரிமலை கோவில் இருக்கும் பகுதி புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இதனால் இந்த வனப்பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து உள்ளனர்.

இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகமாக இருப்பதாலும், அவர்கள் சரணகோ‌ஷம் எழுப்புவதாலும், சபரிமலையில் ஒலி மாசு ஏற்படுவதாக சில இணையதளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானதால் அது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதுகுறித்து கேரள வனத்துறை மந்திரி ராஜு கூறியதாவது:-

KR.RAJU - 2026

சபரிமலையில் பக்தர்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், ஒலி மாசு ஏற்படுவதாகவும் கேரள வனத்துறை மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளதாக இணைய தளங்களில் வெளியான தகவலில் உண்மை கிடையாது.

புதுச்சேரி பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் புலிகள் சரணாலயம் குறித்து ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வு பற்றி கேரள வனத்துறை ஆராய்ந்து அறிக்கை அளித்து உள்ளது. அதைத்தான் திரித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

அதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories