சபரிமலை சரண கோ‌ஷத்தால் ஒலி மாசு குறித்த இணைய தளங்களில் வெளியான தகவல் உண்மை கிடையாது…!.

sabrimali - 2026

சபரிமலையில் பக்தர்கள் கோஷத்தால் ஒலி மாசு ஏற்படுவதாக, கேரள வனத்துறை அறிக்கை அளித்துள்ளதாக இணைய தளங்களில் வெளியான தகவல் பற்றி விசாரணைக்கு கேரள வனத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

சரண கோ‌ஷத்தால் ஒலி மாசா? – இணையதளத்தில் வெளியான தகவல் பற்றி விசாரணைக்கு மந்திரி உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோவில்

கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இங்கு நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மற்றும் மாதாந்திர பூஜைகளின்போது ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி, ‘சுவாமியே சரணம் ஐயப்பா…..’ என்ற சரண கோ‌ஷம் முழங்க நடந்து செல்வார்கள்.

சபரிமலை கோவில் இருக்கும் பகுதி புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இதனால் இந்த வனப்பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து உள்ளனர்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகமாக இருப்பதாலும், அவர்கள் சரணகோ‌ஷம் எழுப்புவதாலும், சபரிமலையில் ஒலி மாசு ஏற்படுவதாக சில இணையதளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானதால் அது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதுகுறித்து கேரள வனத்துறை மந்திரி ராஜு கூறியதாவது:-

KR.RAJU - 2026

சபரிமலையில் பக்தர்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுவதாகவும், ஒலி மாசு ஏற்படுவதாகவும் கேரள வனத்துறை மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளதாக இணைய தளங்களில் வெளியான தகவலில் உண்மை கிடையாது.

புதுச்சேரி பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் புலிகள் சரணாலயம் குறித்து ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வு பற்றி கேரள வனத்துறை ஆராய்ந்து அறிக்கை அளித்து உள்ளது. அதைத்தான் திரித்து இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

அதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories