ஆலயங்கள்

உலகமெங்கும் முருகன் தலங்களில் தைப்பூச திருவிழா! கோலாகலக் கொண்டாட்டம்!

மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை திருப்பதி பெருமாளுக்கு அபிஷேக நீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது தெரியுமா?

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். தினமும் பல லட்சம் மக்கள் வந்து வணங்கும் இந்த கோவில் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. கி.மு.400-100 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் இந்த கோவிலை பற்றிய குறிப்புகளை நம்மால் அறிய முடிகிறது. பல சிறப்புகளோடு மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் இரண்டு தங்க கிணறுகள் உள்ளன. அந்த தங்க கிரணு எங்கே உள்ளது. அது எப்படி எப்போது உருவானது என்பது பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக விஷ்ணுவின் அவதாரமான பெருமாள் திருவேங்கடத்தில் குடிகொண்டார். அப்போது அனைவருக்கு உணவு தயாரிப்பதற்காக லட்சுமி தேவி ஒரு தீர்த்தயத்தை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. அந்த தீர்த்தமே லட்சுமி தீர்த்தும் என்றும் ஸ்ரீ தீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டது. அதே போல பூதேவியும் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே பூதீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இவை இரண்டு மண்ணுக்குள் புதைந்து போனது. பல வருடங்களுக்கு பிறகு, பெருமாளுக்கு பூஜை செய்ய உகந்த பூக்களை கொண்ட ஒரு தோட்டத்தை உருவாக்க முற்பட்டார் ஒரு இலஞ்சர். அப்போது அவர் குழி தோண்டுகையில் ஸ்ரீதீர்த்தத்தையும் பூதீர்த்ததையும் கண்டறிந்தார். ஆனால் அந்த இளஞ்சரின் காலத்திற்கு பிறகு மீண்டும் அந்த இரண்டு தீர்த்தங்களும் சிதிலம் அடைந்தன. அந்த இளஞ்சரின் புண்ணியத்தால் அவர் அடுத்த பிறவியில் தொண்டைமான் சக்ரவர்த்தியாக பிறந்தார் என்று கூறப்படுகிறது.அதன் பிறகு அவர் திருமலை கோவிலை கட்டமைத்தார். அதோடு முன் ஜென்மத்தில் தான் கண்டறிந்த தீர்த்தத்தை சுற்றி தங்க கவசம் செய்துள்ளார். அந்த கிணறே தற்போது தங்க கிணறு என்று அழைக்கப்படுகிறது. உலகில் தங்கத்தால் அலங்கரிக்க பட்ட ஒரே கிணறு இதுமட்டுமே என்று கூறப்படுகிறது.கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணற்றின் நீர் பயன்படுத்துவதற்கு எதுவாக இல்லை என்பதால் இந்த கிரணு அரசால் மூடப்பட்டது. ஆனால் பகவானின் அருளால் கடந்த 2007 ஆண்டு இந்த கிணற்றின் நீரானது பயன்படுத்துவதற்கு எதுவாக மாறியது என்று கூறப்படுகிறது. இந்த தங்க கிணறில் உள்ள நீரை கொண்டு தான் ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த கிணறுகள் திருப்பதியில் ஒரு சிறு மேட்டில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

‘ஸ்ரீராம் ஜென்மபூமி திரத் ஸ்சேத்திரா’ அறக்கட்டளை: மோடி அறிவிப்பு!

இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம், சீக்கியம், கிறிஸ்தவம், புத்த மதம், பார்சி அல்லது ஜெய்ன் அனைவரும் ஒரு குடும்பத்தின் அங்கம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வளர்ச்சி அவசியம்.

தஞ்சை கும்பாபிஷேகம்: மந்திரம் சொல்ல எதிர்ப்பு! சினிமா இயக்குநர் கைது!

இயக்குனர் கௌதமன் போராட்டம் செய்ய தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பழனி: 24 அடி உயர ஐம்பொன் வேல் பிரதிஷ்டை!

உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் பழநியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆறு

சபரிமலையில் எல்லா வயது பெண்களுக்கும் அனுமதி: வழக்கு இன்று விசாரணை!

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் எழுப்புயுள்ள கேள்விகளை கருத்தில் கொண்டு 10 நாட்கள் விசாரணை நடைபெறுகிறது.
- 2026

தஞ்சாவூர் குடமுழுக்கு: மாணவர்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கம்!

இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சாவூருக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு!

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என ஐகோர்ட் கிளையில் அரசு உறுதியளித்துள்ளது. இதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு அரசு மற்றும் தேவஸ்தான நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம், மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''தஞ்சை பெருவுடையார் (பெரிய) கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.தொன்மையான இந்த ஆலயத்தில் வரும் பிப்.5ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. சைவ சமய நெறிப்படி அமைக்கப்பட்ட இந்த கோயிலில் 1997ல் பிரதிஷ்டை விழா நடந்தது. சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட்டதால் அப்போது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பலர் இறந்தனர். தற்போது பிப்.5ல் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.இதேபோல் தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோரது அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. நீதிபதிகள் நேற்று காலை வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன் மற்றும் பெ.மணியரசன் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.வக்கீல் சரவணன் என்பவர் சார்பில், 'தஞ்சை பெரிய கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், குடமுழுக்கு நடத்த தொல்லியல் துறை அனுமதி பெறவில்லை. எனவே, தொல்லியல் துறை அனுமதி பெறவும், அனுமதியின்றி குடமுழுக்கு நடத்த தடையும் விதிக்க வலியுறுத்தி மனு செய்யவுள்ளதாக' கூறப்பட்டது. இதேபோல், சென்னையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சார்பில், 'சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் எனவும், இந்த மனுக்களையும் அவசர மனுவாக ஏற்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு சேர்த்து விசாரிக்க வேண்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசு வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ''பெரிய கோயில் குடமுழுக்கு தொடர்பாக பதில்மனு செய்ய நாளை (இன்று) வரை அவகாசம் வேண்டும்'' என்றார். இதையடுத்து முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை இன்று (ஜன.28) தள்ளி வைத்தனர்.இந்த மனுக்கள் அனைத்தும் இன்று நீதிபதிகள் எம்.துரைசுவாமி மற்றும் டி.ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது கோயில் தேவஸ்தானம் சார்பில், 'குடமுழுக்க நடத்த மத்திய தொல்லியல் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஓதுவார்கள் மூலம் தமிழ் பெருமுறை மந்திரங்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவை இசைக்கப்பட உள்ளது. இதற்கென ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, அந்த விபரம் அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.கடந்த 1997ம் ஆண்டு தீ விபத்து நடந்ததால் இம்முறை யாக குண்டங்கள் அனைத்தும் கோயிலுக்கு வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில், 'குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளில் நடத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டது.மனுதாரர்கள் தரப்பில், 'குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பங்கேற்கும் வகையில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்க உறுதி செய்யப்பட வேண்டும்.தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கல்லூரிகளில் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர்களாக பயிற்சி பெற்றுள்ளனர். குடமுழுக்கு விழாவை அவர்களும் பங்கேற்று நடத்த வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டதுஇதையடுத்து, 'தமிழக அரசு மற்றும் தேவஸ்தானம் சார்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பிரமாண பத்திரம் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணையை நாளை தள்ளி வைத்தனர்.

பழனி தைப்பூசம்: பிப்.2 ல் கொடியேற்றம்! 8 ல் தேரோட்டம்!

முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணமும், இதைத்தொடர்ந்து வெள்ளித்தேராட்டமும் நடைபெறவுள்ளது.

அயோத்தி ராமர் கோவில்! மார்ச் 25-ல் பணி தொடக்கம்!

எந்த மாதிரி கோவில் அமைய வேண்டும் என்பது குறித்தும் அதில் முடிவெடுக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்கும்.ராமநவமி தினத்தில் கட்டுமான பணியை தொடங்க உள்ளனர்.

நெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்!

அதேபோல் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் கோவில்களில் இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இனி இப்படிதான் இந்த கோவிலுக்கு போகணும்! உடை கட்டுப்பாடு!

இந்த புதிய உடை கட்டுப்பாடு அமல்படுத்துவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை
- 2026

Recent articles