December 5, 2025, 12:07 PM
26.9 C
Chennai

கிரிக்கெட் வரலாற்றில் இப்படியும் நடந்திருக்கு! ரிடயர்ட் அவுட் முறையின் உச்சகட்ட பயன்பாடு!

ashwin ravichandran 500 - 2025
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

2022ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் 19ஆவது ஓவரில் தான் ரிடயர்ட் அவுட் முறையில் அவுட் ஆவதாகச் சொல்லிவிட்டு மைதானத்தைவிட்டு வெளியில் சென்றுவிட்டார். அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

மீதமுள்ள 10 பந்துகளில் தனது அணியின் மெகா ஹிட்டர் ஒருவர் வந்து சிக்ஸ், ஃபோர்களாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என்ற எண்ணத்தில் அஷ்வின் அதைச் செய்தார். ஆனால் அன்றைய தினம் அவரது அணி அவர் எதிர்பார்த்தைப் போல அதிரடியாக ரன் சேர்க்கவில்லை.

இந்த ரிடயர்ட் அவுட் முறை என்றால் என்ன? கிரிக்கெட்டில், “காயத்தால் ஓய்வு பெறுவது (retired hurt) உண்டு. ஒரு பேட்ஸ்மேன் காயம் அல்லது நோய் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறி, பின்னர் அவர் உடல்நிலை சரியானபின்பு, அவர்களின் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கவில்லை என்றால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியும்.

அதே சமயம், “ஓய்வு பெற்றவர்” (retired out) என்பது பேட்டிங் அணி ஒரு பேட்டரை மைதானத்திலிருந்து நீக்குவதற்கான ஒரு மூலோபாய முடிவாகும், மீண்டும் அந்த பேட்டர் பேட்டிங் செய்ய முடியாது.

இந்த ரிடயர்ட் அவுட் முறையின் உச்ச கட்டமாக ஒரு அணி விக்கட் இழப்பின்றி 192 ரன் எடுத்திருந்த நிலையில் அதே 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கிறீர்களா?

image - 2025

மகளிர் உலகக் கோப்பை 2025 தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆசிய அணிகளுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இதில் ஒரு தகுதிச் சுற்று போட்டியில் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணி மற்றும் கத்தார் மகளிர் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணியில், இஷா ரோஹித் ஓசா 113 ரன்களை குவித்து அசத்தினார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை தீர்த்தா சதீஸும் தொடர்ந்து அதிரடி காட்டி 74 ரன்களை குவிதார். இந்த அணி விக்கெட்களை இழக்காமல் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தது. 192/0 ரன்களை எடுத்து விளையாடி வந்தபோது, மழை குறுக்கிடும் நிலை ஏற்பட்டது.

10 பேட்டர்களும் அவுட்

இதனால், பயந்துபோன ஐக்கிய அரபு அமீரக அணி, 192/0 ரன்கள் எடுத்திருந்தபோது, மீதமிருந்த அனைத்து பேட்டர்களும் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் அவுட் ஆனார்கள். கத்தார் மகளிர் அணி, மிகவும் பலவீனமான அணி என்பதால், தைரியமாக இந்த முடிவை எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, உடனே பீல்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி தொடர்ந்து அபாரமாக பந்துவீசியதால், கத்தார் மகளிர் அணி, வெறும் 29 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இந்த 29 ரன்களில், ஓபனர் ரிப்ஜா இமானுவேல் மட்டும் 20 ரன்களை எடுத்திருந்தார்.

இவ்வாறு ரிடயர்ட் அவுட் முறையின் உச்ச கட்ட பயன்பாடு இந்த ஆட்டத்தில் வெளிப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories