December 5, 2025, 3:16 PM
27.9 C
Chennai

டாஸ்மார்க் திறக்க வேண்டாம்! முதல்வர் வீட்டுக்கு நடைபயணம்.. யார் தெரியுமா?

madhu

நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், மது நமக்கு என்ன தரப்போகிறது என்ற கோஷத்துடன் முதல்வர் வீடு வரைக்கும் நடைபயணம் மேற்கொண்ட 5 சிறார்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 40 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்துள்ள நிலையில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதில் மதுக்கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் நாளை முதல் (07.05.2020) சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு திமுக, தமிழக பாஜக, பாமக கட்சிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால்,சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகிவிடும் என பலதரப்பிலிருந்து எழுந்துள்ள குற்றசாட்டுகள். மேலும் டாஸ்மாக்கை திறப்பதால் குடும்ப வன்முறைகள் நிகழும் அபாயமும் உள்ளது. ஆதலால் கொரோனா இல்லாத நிலையை எட்டிய பிறகே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 5 பேர் சேர்ந்து எடுத்த முடிவு பாராட்டுகளை பெற்று வருகிறது.டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி ஆகாஷ், விக்டோரியா, ஆதர்ஷ், சபரி மற்றும் சுப்ரியா ஆகிய 5 சிறுவர்கள் படூர் முதல் முதலமைச்சர் இல்லம் வரை சுமார் 30 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் குடியை விடு படிக்க விடு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சின்னஞ்சிறு வயதில் சிறுவர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு நடைபயணம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ஆனால் ஓ.எம்.ஆர்.சாலையில் 5 சிறார்களையும் போலீசார் தடுத்தி நிறுத்தி அழைத்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories