கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதலித்து மணந்த கணவனை கொலை செய்த மனைவி!

kalla kathal

ஈரோடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவர் அதே பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் . இவரும் இந்துமதி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு வயதில் மகனும் உள்ளார்.

ஆட்டோ டிரைவர் குமார் நேற்று சாக்கு மூட்டைக்குள் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், குமாரின் மனைவி இந்துமதிக்கும், கோபி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக ஊர் முழுக்க அரசல் புரசலாக பேசியதன் மூலம் தெரிய வந்தது.

பின் இந்துமதியிடம் காவல் துறையினர் விசாரிக்க, அவர் அழுது புலம்பியபடி, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதேபோல் ஸ்ரீதரிடம் விசாரிக்கச் செல்லும் முன் இந்துமதியும் ஸ்ரீதரும் ஒரே நேரத்தில் மாயமாகியுள்ளனர்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

இதையடுத்து தப்ப முயன்ற அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி நேற்று மாலை கைது செய்தனர். பின் மேற்கொண்ட விசாரணையில் இந்துமதி இவ்வாறு தெரிவித்தார்.

கோபி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் போது குமார்க்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். இருவருக்கும் மகனும் பிறந்துவிட்டான்.

இதையடுத்து பச்சை மலையில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கே வந்த ஸ்ரீதர் என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.

குமாரை பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சிகள் ஸ்ரீதரை பார்க்கும்போது அதிக அளவில் ஏற்பட்டதால் அவரை எனக்கு மிகவும் பிடித்து காலப்போக்கில் அது காதலாக மாறியது.

நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டோம். இதற்கு எனது கணவர் குமார் தடையாக இருந்தார். உண்மையை அறிந்த போதிலும், அவர் என்னை கண்டிக்க மட்டுமே செய்தார். இருப்பினும் எனக்கு ஸ்ரீதரை தான் பிடித்திருந்தது.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

எனவே நாங்கள் குமாரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி, சம்பவத்தன்று அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்து இருந்தார். அப்போது ஸ்ரீதரை வரவழைத்து, முதலில் நான்தான் தலையணையால் முகத்தை அமுக்கினேன்.

பிறகு ஸ்ரீதர் கட்டையால் கணவரை பயங்கரமாக தாக்கி இருவரும் சேர்ந்து கொலை செய்து பின் சாக்கு மூட்டையில் போட்டு நள்ளிரவில் ஸ்கூட்டி மூலம் கொண்டு சென்று ஏரிக்கரையில் வீசிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்துமதியுடன் சேர்ந்து குமாரை கொலை செய்த ஸ்ரீதரும் காதல் திருமணம் செய்து கொண்டவர் தான். அவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. ஒருவருக்கு ஒருவர் பிடித்து காதல் திருமணம் செய்து கொண்டு பின் இந்துமதி கணவனுக்கும் ஸ்ரீதர் அவரது மனைவிக்கும் இப்படி ஒரு துரோகத்தை செய்தது கேவலத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories