கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதலித்து மணந்த கணவனை கொலை செய்த மனைவி!

kalla kathal

ஈரோடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவர் அதே பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் . இவரும் இந்துமதி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு வயதில் மகனும் உள்ளார்.

ஆட்டோ டிரைவர் குமார் நேற்று சாக்கு மூட்டைக்குள் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், குமாரின் மனைவி இந்துமதிக்கும், கோபி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக ஊர் முழுக்க அரசல் புரசலாக பேசியதன் மூலம் தெரிய வந்தது.

பின் இந்துமதியிடம் காவல் துறையினர் விசாரிக்க, அவர் அழுது புலம்பியபடி, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதேபோல் ஸ்ரீதரிடம் விசாரிக்கச் செல்லும் முன் இந்துமதியும் ஸ்ரீதரும் ஒரே நேரத்தில் மாயமாகியுள்ளனர்.

இதையடுத்து தப்ப முயன்ற அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி நேற்று மாலை கைது செய்தனர். பின் மேற்கொண்ட விசாரணையில் இந்துமதி இவ்வாறு தெரிவித்தார்.

கோபி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் போது குமார்க்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். இருவருக்கும் மகனும் பிறந்துவிட்டான்.

இதையடுத்து பச்சை மலையில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கே வந்த ஸ்ரீதர் என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.

குமாரை பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சிகள் ஸ்ரீதரை பார்க்கும்போது அதிக அளவில் ஏற்பட்டதால் அவரை எனக்கு மிகவும் பிடித்து காலப்போக்கில் அது காதலாக மாறியது.

நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டோம். இதற்கு எனது கணவர் குமார் தடையாக இருந்தார். உண்மையை அறிந்த போதிலும், அவர் என்னை கண்டிக்க மட்டுமே செய்தார். இருப்பினும் எனக்கு ஸ்ரீதரை தான் பிடித்திருந்தது.

எனவே நாங்கள் குமாரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி, சம்பவத்தன்று அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்து இருந்தார். அப்போது ஸ்ரீதரை வரவழைத்து, முதலில் நான்தான் தலையணையால் முகத்தை அமுக்கினேன்.

பிறகு ஸ்ரீதர் கட்டையால் கணவரை பயங்கரமாக தாக்கி இருவரும் சேர்ந்து கொலை செய்து பின் சாக்கு மூட்டையில் போட்டு நள்ளிரவில் ஸ்கூட்டி மூலம் கொண்டு சென்று ஏரிக்கரையில் வீசிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்துமதியுடன் சேர்ந்து குமாரை கொலை செய்த ஸ்ரீதரும் காதல் திருமணம் செய்து கொண்டவர் தான். அவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. ஒருவருக்கு ஒருவர் பிடித்து காதல் திருமணம் செய்து கொண்டு பின் இந்துமதி கணவனுக்கும் ஸ்ரீதர் அவரது மனைவிக்கும் இப்படி ஒரு துரோகத்தை செய்தது கேவலத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories