தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்..

gallerye 144943244 3252323 - 2026

காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவதை தடுக்க இலங்கை அதிபர், மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சப்பன். இவருக்கு சொந்தமான விசைப்படலில் கடந்த 24-ஆம் தேதி அதிகாலை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து காரைக்கால் கீழகாசாக்குடியை சேர்ந்த அஞ்சப்பன் மகன் வீரகுமார் மற்றும் வெற்றிவேல், விஜேந்திரன், கார்த்திக், மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு பகுதியை சேர்ந்த அர்ச்சுனன், ராஜேந்திரன், கவி, மாணிக்கவாசகம், அறிவழகன், சுபாஷ், சஞ்ஜய் ஆகிய 11 பேர் சென்றனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் கோடியக்கரையின் தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தூரத்தில் சனிக்கிழமை இரவு இந்திய கடல் எல்லைப் பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கரையினர் எல்லைத்தாண்டி வந்ததாகக் கூறி, எந்தவித விசாரணையும் நடத்தாமல், படகில் இருந்த சாதனங்களை சேதப்படுத்தியுள்ளனர்.  மேலும் பைப், தண்ணீர் பிடிக்கும் பிளாஸ்டி குழாய் உள்ளிட்டவைகளால் இந்திய மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

படகில் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்கள், வலைகள், ஜிபிஆர்எஸ் கருவிகள், 11 பேரின் கைப்பேசிகள், 4 பேர் அணிந்திருந்த வெள்ளி ஆபரணம் உள்ளிட்டவைகளை பிடிங்கிக்கொண்டு சென்றுள்ளனர். 

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து காரைக்கால் கீழகாசாக்குடி மீனவ கிராம பஞ்சாயத்தாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை பகலில் காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்திற்கு வந்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்த மீனவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மீனவர்கள் அனைவருக்கும் மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த காரைக்கால் கடலோரக்காவல் நிலைய காவல்துறையினர், நகர காவல்துறையினர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இது சம்பந்தமாக காவல்துறியினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் வீரகுமார் கூறுகையில், இந்திய கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் கடல்கொள்ளையர்கள் தாக்குதல், மறுபக்கம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் என வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். சனிக்கிழமை சம்பவத்தின்போது இலங்கை கடற்படையினர் மிகவும் கொடூரமாக நடந்துகொண்டனர்.

கடலில் மீன்பிடிப்பதை தவிர வேறு எந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது. மேலும் தொடர்ந்து இந்திய மீனவர்களை பல வழிகளில் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. எனவே இது குறித்த மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக காரைக்கால் நகரக்காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இது குறித்து மத்திய அமைச்சர் எல். முருகன் கூறியிருப்பதாவது, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவதை தடுக்க இலங்கை அதிபர், மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.

ஏப்ரல் மாதம் இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு விரைவில் கிடைக்கும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனக் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என இலங்கை கடற்படை வழக்கமாக வைத்துள்ளது. இதற்கு பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையிலும், இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories