சுபாஷிதம்: ஊருக்கு உபதேசம்!

subhashitam-3
subhashitam-3

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

62. ஊருக்கு உபதேசம்

ஸ்லோகம்:

பரோபதேசவேலாயாம் சிஷ்டா: சர்வே பவந்தி வை |
விஸ்மரந்தீஹ சிஷ்டத்வம் ஸ்வகார்யே சமுபஸ்திதே||

பொருள்:

பிறருக்கு அறிவுரை செய்யும் போது அனைவரும் உத்தமர்களே! தனக்கென்று வரும்போது அந்த நீதி நெறிகளை மறந்து போவார்கள்.

விளக்கம்:

‘ஊருக்குத்தான் உபதேசம்… உனக்கும் எனக்கும் இல்லை’ என்றொரு சொலவடை உள்ளது.  இது அப்படிப்பட்ட கருத்தை சுட்டிக்காட்டும் ஸ்லோகம்.

சிலர், “இனிமையாக பேசவேண்டும். அன்போடு விருந்தினரை உபசரிக்க வேண்டும்” போன்ற பல உபதேசங்களை பிறருக்கு கூறுவார்கள். ஆனால் தனக்கென்று வரும்போது அதற்கு மாறாக நடந்து கொள்வார்கள்.

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது குறித்து மனநல நிபுணர்கள் கூறும் போது, “பிள்ளைகள் உங்கள் அறிவுரைப்படி நடக்க மாட்டார்கள். உங்கள் நடத்தையை அனுசரிப்பார்கள்” என்று கூறுவார்கள். உபதேசத்தை விட உதாரணமாக நடந்து கொள்வது முக்கியம். எப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் கூறுவதை நிறுத்திவிட்டு நாம் கடைப்பிடிக்க முயல வேண்டும் என்ற இந்த அழைப்பு நம் அனைவருக்கும் கண்விழிப்பு ஏற்படுத்த வேண்டும்.

ALSO READ:  தமிழகத்தின் ‘மக்கள் ஆளுநர்’!

இதன் தொடர்பாக ஒரு புகழ்பெற்ற கதை உள்ளது. பக்கத்து வீட்டிலிருந்து ஒருவனுக்கு அழுகை சத்தம் கேட்டது. ஒரு நண்பன், அதுவும் தன்னைப் போன்ற வணிகன் துயரத்தில் உள்ளான் என்பதால் போய் விசாரித்தான். வியாபாரத்தில் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டது என்றும் கப்பல் மூழ்கி விட்டது என்றும் தந்தி வந்ததாகத் தெரிவித்தான் நண்பன்.

அவனை சமாதானப்படுத்தி, “பணம் போனால் போகிறது… நாளை சம்பாதித்துக் கொள்ளலாம்… செல்வம் நிலையில்லாதது என்று தெரியாதா?” என்று அறிவுரை கூறி விட்டு, “எங்கே அந்த தந்தியைக் காட்டு!” என்று கேட்டு வாங்கிப் பார்த்தான். இப்போது அழுவது அவன் பங்காயிற்று.

ஏனென்றால், அந்த தந்தி இவன் முகவரிக்கு வந்தது. தவறுதலாக அடுத்த வீட்டில் கொடுத்து விட்டார்கள் என்பது புரிந்தது. இப்போது இவனுடைய அழுகையை யாராலும் சமாதானப்படுத்த முடியாமல் போனது. இத்தனை நேரம் நண்பனுக்கு கூறிய வேதாந்தம்  காற்றில் பறந்து போனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories