December 5, 2025, 7:35 PM
26.7 C
Chennai

சுபாஷிதம்: ஊருக்கு உபதேசம்!

subhashitam-3
subhashitam-3

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

62. ஊருக்கு உபதேசம்

ஸ்லோகம்:

பரோபதேசவேலாயாம் சிஷ்டா: சர்வே பவந்தி வை |
விஸ்மரந்தீஹ சிஷ்டத்வம் ஸ்வகார்யே சமுபஸ்திதே||

பொருள்:

பிறருக்கு அறிவுரை செய்யும் போது அனைவரும் உத்தமர்களே! தனக்கென்று வரும்போது அந்த நீதி நெறிகளை மறந்து போவார்கள்.

விளக்கம்:

‘ஊருக்குத்தான் உபதேசம்… உனக்கும் எனக்கும் இல்லை’ என்றொரு சொலவடை உள்ளது.  இது அப்படிப்பட்ட கருத்தை சுட்டிக்காட்டும் ஸ்லோகம்.

சிலர், “இனிமையாக பேசவேண்டும். அன்போடு விருந்தினரை உபசரிக்க வேண்டும்” போன்ற பல உபதேசங்களை பிறருக்கு கூறுவார்கள். ஆனால் தனக்கென்று வரும்போது அதற்கு மாறாக நடந்து கொள்வார்கள்.

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது குறித்து மனநல நிபுணர்கள் கூறும் போது, “பிள்ளைகள் உங்கள் அறிவுரைப்படி நடக்க மாட்டார்கள். உங்கள் நடத்தையை அனுசரிப்பார்கள்” என்று கூறுவார்கள். உபதேசத்தை விட உதாரணமாக நடந்து கொள்வது முக்கியம். எப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் கூறுவதை நிறுத்திவிட்டு நாம் கடைப்பிடிக்க முயல வேண்டும் என்ற இந்த அழைப்பு நம் அனைவருக்கும் கண்விழிப்பு ஏற்படுத்த வேண்டும்.

இதன் தொடர்பாக ஒரு புகழ்பெற்ற கதை உள்ளது. பக்கத்து வீட்டிலிருந்து ஒருவனுக்கு அழுகை சத்தம் கேட்டது. ஒரு நண்பன், அதுவும் தன்னைப் போன்ற வணிகன் துயரத்தில் உள்ளான் என்பதால் போய் விசாரித்தான். வியாபாரத்தில் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டது என்றும் கப்பல் மூழ்கி விட்டது என்றும் தந்தி வந்ததாகத் தெரிவித்தான் நண்பன்.

அவனை சமாதானப்படுத்தி, “பணம் போனால் போகிறது… நாளை சம்பாதித்துக் கொள்ளலாம்… செல்வம் நிலையில்லாதது என்று தெரியாதா?” என்று அறிவுரை கூறி விட்டு, “எங்கே அந்த தந்தியைக் காட்டு!” என்று கேட்டு வாங்கிப் பார்த்தான். இப்போது அழுவது அவன் பங்காயிற்று.

ஏனென்றால், அந்த தந்தி இவன் முகவரிக்கு வந்தது. தவறுதலாக அடுத்த வீட்டில் கொடுத்து விட்டார்கள் என்பது புரிந்தது. இப்போது இவனுடைய அழுகையை யாராலும் சமாதானப்படுத்த முடியாமல் போனது. இத்தனை நேரம் நண்பனுக்கு கூறிய வேதாந்தம்  காற்றில் பறந்து போனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories