சுபாஷிதம்: உண்மையான தூய்மை!

subhashitam_1-5-696x392-3
subhashitam_1-5-696×392-3

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! : 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

104. உண்மையான தூய்மை! 

ஸ்லோகம்:

சர்வேஷாமேவ சௌசானாம் அர்தசௌசம் பரம் ஸ்ம்ருதம் |
யோ௨ர்தே சுசி: ஸ ஹி சுசி: ந ம்ருத்வாரிசுசிஸ்சுசி: ||
– மனுஸ்மிருதி (5 -106)

பொருள்:

சுத்தங்கள் அனைத்திலும் உயர்ந்தது பண விஷயத்தில் சுத்தமாக இருப்பது. பணவிஷயத்தில் தூய்மையாக இருப்பவர் மிகுந்த தூய்மையானவர். பண விஷயத்தில் சுத்தமாக இல்லாதவர் மண்ணாலும் நீராலும் உடலை சுத்தம் செய்து கொண்டாலும் தூய்மையாக மாட்டார்.

விளக்கம்: 

மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள நீதி, தர்மம் குறித்த உண்மைகளுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அன்று அவர்கள் அளித்த முத்துக்களான அறிவுரைகள் இன்றைய காலத்துக்கும் பயன்படும் விதமாக உள்ளன.

செல்வத்தில் சுத்தம் என்பது பிறர் பொருளை அபகரிக்காமல் இருப்பது, கையூட்டு பெறாமல் இருப்பது, அளிக்காமல் இருப்பது, எதற்காகப்  

பெற்றோமோ  அதற்காகவே பணத்தை பயன்படுத்துவது.  

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

உடலுக்குத் தூய்மை சோப்பு, ஷாம்புகளால் கிடைக்கலாம். ஆனால் உள்ளத்தூய்மை உள்ளவர்கள் எத்தனை பேர்? தனக்கு உரிமை இல்லாத பிறர் செல்வம் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொள்பவர் உண்மையில் தூய்மையானவர் என்பது இந்த ஸ்லோகத்தின் உட்பொருள்.

பண விஷயங்களில்தான் நம் உண்மையான குணம் வெளிப்படும். அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று இங்கே பார்க்கலாம். மறைந்த சிமன்லால் சீதல்வாட் என்பவர் மும்பை பல்கலைக்கழக வைஸ் சான்சிலராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, பிரபல நீதிபதியாக இருந்தார்.

ஒருநாள் ஒருவர் அவரை சந்திப்பதற்கு வந்தார். தான் செய்த குற்றத்திலிருந்து தப்பித்தால், தனக்கு அனுகூலமாக தீர்ப்பளித்தால்… ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் சிமன்லால் அதனை ஏற்க மறுத்தார். அப்போது அந்த மனிதர், “நன்றாக யோசித்துப் பாருங்கள்! இவ்வாறு என்னைப் போல் லட்ச ரூபாய் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள்” என்றார்.

அதற்கு சீதல்வாட் கூறினார், “ஐயா! கொடுப்பவர்  நிறைய பேர் கிடைப்பார்கள். இத்தனை பெரிய தொகையை மறுப்பவர் உனக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்!” என்றார். பேராசைக்கு துளியும் ஆளாகாத இதுபோன்ற மனிதர் பணவிஷயத்தில் தூய்மைக்கு உதாரணம். இவரைப் போன்றவர்கள் சமுதாயத்திற்குத் தேவை!

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories