நல்லூர் கந்தசாமி கோயில் தங்க விமான கும்பாபிஷேகம்…!

nallur - 2026

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ணவிமான ( தங்கவிமான/ பொற்கூரை) மஹா கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக அறிய முடிகிறது.

புகழ்பெற்ற இந்த பேராலயத்தில் ஆவணிப்பெருவிழா சிறப்புற நிகழ்ந்து வரும் சூழலில் நாளை க்ருத்திகை நக்ஷத்திரத்தில் ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளதாக அறிகிறோம்.

மஹோத்ஸவ காலத்தில் வரும் கார்த்திகை நக்ஷத்தில் புதிதாக அமைக்கப்படும் கோபுரம் ( உ+ம் ஷண்முகர் வாயில் கோபுரம், குபேரவாயில் கோபுரம்) போன்றவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்யும் மரபு நல்லூரில் அண்மைக்காலத்தில் பேணப்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவும் இதனை நோக்கலாம்.

இதன் மூலம் இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயம் என்ற பெருமையும் நல்லூருக்கு அமையவுள்ளது.

தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி வேங்கடாஜலபதி கோயில், ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உன்னத வைபவத்தை நிறைவேற்றுவதற்காக சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் உள்ளிட்ட நான்கு பூஜ்ய ஸ்ரீ தீக்ஷிதர்களும் இன்னும் சில வேத பண்டிதர்களும் நல்லூருக்கு வருகை தந்துள்ளனர்.

ஆக, விரிவான வேத பாராயணத்துடனும் கலச பூஜை, ஹோமம் ஆகியவற்றுடனும் ஆரம்பமாகியுள்ள ஸ்வர்ண விமான பிரதிஷ்டா யாக பூஜைகள் தில்லை வாழ் அந்தணர்களால் “வைதிக” விதிப்படி நடைபெறும் என்றும் அறிய முடிகிறது.

இது உறுதிப்படுத்தப்படுமாயின், ஈழத்தில் விமான வைதிக ப்ரதிஷ்டை நிகழ்ந்த பேராலயம் என்ற தனித்துவமும் நல்லூருக்கே அமையும்.

நல்லூரில் வழமைக்கு மாறாக இம்முறை உள் வீதியில் நிகழும் இக்கும்பாபிஷேக நிகழ்வுகள் தேவஸ்தானத்தாராலேயே வெளிவீதியிலும் வீடியோவாக ஒளிபரப்புச்செய்யப்படும் என்றும் அறியமுடிகிறது.

ஆனால் நல்லூரில் நடைபெறும் நிகழ்வுகளின் முழுவடிவம் அது நடைபெற்ற பின்னரே நிர்வாகஸ்தர் அல்லாத பிறரால் முழுமையாக அறிய முடியும் என்பதும் நல்லூரில் தனித்துவம் தானே?

தற்போதைய நல்லூர் தர்மபரிபாலகர்கள் தில்லை கூத்தன் பேரிலும் செந்திலாண்டவன் பேரிலும் அதிக பக்தி கொண்டவர்கள். அக்கோயில்களின் நடைமுறைகளை கவனித்து நல்லூரிலும் நடைமுறைப்படுத்தி வரும் பண்புடைவர்கள்.

அருணகிரிநாதரால் பாடப்பட்டதாக கருதப்படுவதும், முருக பக்தர்களின் அதீத பக்தி நிலையமுமான நல்லூரில் ஆறுமுகத்தழகன் தன் துணைவியரோடு இனி பொற்கூரை நிழலில் எழுந்தருளப்போகிறான். இனியேனும் அவன் நம்மை பன்னிரு கண்ணில் ஒரு கடைக்கண் நோக்காவது செய்து கடாக்ஷிக்க பிரார்த்திப்போம்.

முல்லையின் முறுவல் கொள் மங்கையாளுடன்
கல்லையும் கசியச் செய் கருணையாளனாய்
நல்லை பொற் கோயிலில்
நல்லருள் புரியும்
எல்லையில் அருளுடை இறையை ஏத்துவாம்
( குமாரகாவியம் -4)

தியாக. மயூரகிரிக் குருக்கள்

#ஸ்வர்ணவிமானம் #தங்கவிமானம் #நல்லூர் #பொற்கூரை#வைதிகபிரதிஷ்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories