December 5, 2025, 7:20 PM
26.7 C
Chennai

நல்லூர் கந்தசாமி கோயில் தங்க விமான கும்பாபிஷேகம்…!

nallur - 2025

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ணவிமான ( தங்கவிமான/ பொற்கூரை) மஹா கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக அறிய முடிகிறது.

புகழ்பெற்ற இந்த பேராலயத்தில் ஆவணிப்பெருவிழா சிறப்புற நிகழ்ந்து வரும் சூழலில் நாளை க்ருத்திகை நக்ஷத்திரத்தில் ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளதாக அறிகிறோம்.

மஹோத்ஸவ காலத்தில் வரும் கார்த்திகை நக்ஷத்தில் புதிதாக அமைக்கப்படும் கோபுரம் ( உ+ம் ஷண்முகர் வாயில் கோபுரம், குபேரவாயில் கோபுரம்) போன்றவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்யும் மரபு நல்லூரில் அண்மைக்காலத்தில் பேணப்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவும் இதனை நோக்கலாம்.

இதன் மூலம் இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயம் என்ற பெருமையும் நல்லூருக்கு அமையவுள்ளது.

தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி வேங்கடாஜலபதி கோயில், ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உன்னத வைபவத்தை நிறைவேற்றுவதற்காக சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் உள்ளிட்ட நான்கு பூஜ்ய ஸ்ரீ தீக்ஷிதர்களும் இன்னும் சில வேத பண்டிதர்களும் நல்லூருக்கு வருகை தந்துள்ளனர்.

ஆக, விரிவான வேத பாராயணத்துடனும் கலச பூஜை, ஹோமம் ஆகியவற்றுடனும் ஆரம்பமாகியுள்ள ஸ்வர்ண விமான பிரதிஷ்டா யாக பூஜைகள் தில்லை வாழ் அந்தணர்களால் “வைதிக” விதிப்படி நடைபெறும் என்றும் அறிய முடிகிறது.

இது உறுதிப்படுத்தப்படுமாயின், ஈழத்தில் விமான வைதிக ப்ரதிஷ்டை நிகழ்ந்த பேராலயம் என்ற தனித்துவமும் நல்லூருக்கே அமையும்.

நல்லூரில் வழமைக்கு மாறாக இம்முறை உள் வீதியில் நிகழும் இக்கும்பாபிஷேக நிகழ்வுகள் தேவஸ்தானத்தாராலேயே வெளிவீதியிலும் வீடியோவாக ஒளிபரப்புச்செய்யப்படும் என்றும் அறியமுடிகிறது.

ஆனால் நல்லூரில் நடைபெறும் நிகழ்வுகளின் முழுவடிவம் அது நடைபெற்ற பின்னரே நிர்வாகஸ்தர் அல்லாத பிறரால் முழுமையாக அறிய முடியும் என்பதும் நல்லூரில் தனித்துவம் தானே?

தற்போதைய நல்லூர் தர்மபரிபாலகர்கள் தில்லை கூத்தன் பேரிலும் செந்திலாண்டவன் பேரிலும் அதிக பக்தி கொண்டவர்கள். அக்கோயில்களின் நடைமுறைகளை கவனித்து நல்லூரிலும் நடைமுறைப்படுத்தி வரும் பண்புடைவர்கள்.

அருணகிரிநாதரால் பாடப்பட்டதாக கருதப்படுவதும், முருக பக்தர்களின் அதீத பக்தி நிலையமுமான நல்லூரில் ஆறுமுகத்தழகன் தன் துணைவியரோடு இனி பொற்கூரை நிழலில் எழுந்தருளப்போகிறான். இனியேனும் அவன் நம்மை பன்னிரு கண்ணில் ஒரு கடைக்கண் நோக்காவது செய்து கடாக்ஷிக்க பிரார்த்திப்போம்.

முல்லையின் முறுவல் கொள் மங்கையாளுடன்
கல்லையும் கசியச் செய் கருணையாளனாய்
நல்லை பொற் கோயிலில்
நல்லருள் புரியும்
எல்லையில் அருளுடை இறையை ஏத்துவாம்
( குமாரகாவியம் -4)

தியாக. மயூரகிரிக் குருக்கள்

#ஸ்வர்ணவிமானம் #தங்கவிமானம் #நல்லூர் #பொற்கூரை#வைதிகபிரதிஷ்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories