நல்லூர் கந்தசாமி கோயில் தங்க விமான கும்பாபிஷேகம்…!

nallur - 2026

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ணவிமான ( தங்கவிமான/ பொற்கூரை) மஹா கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக அறிய முடிகிறது.

புகழ்பெற்ற இந்த பேராலயத்தில் ஆவணிப்பெருவிழா சிறப்புற நிகழ்ந்து வரும் சூழலில் நாளை க்ருத்திகை நக்ஷத்திரத்தில் ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளதாக அறிகிறோம்.

மஹோத்ஸவ காலத்தில் வரும் கார்த்திகை நக்ஷத்தில் புதிதாக அமைக்கப்படும் கோபுரம் ( உ+ம் ஷண்முகர் வாயில் கோபுரம், குபேரவாயில் கோபுரம்) போன்றவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்யும் மரபு நல்லூரில் அண்மைக்காலத்தில் பேணப்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவும் இதனை நோக்கலாம்.

இதன் மூலம் இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயம் என்ற பெருமையும் நல்லூருக்கு அமையவுள்ளது.

தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி வேங்கடாஜலபதி கோயில், ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உன்னத வைபவத்தை நிறைவேற்றுவதற்காக சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் உள்ளிட்ட நான்கு பூஜ்ய ஸ்ரீ தீக்ஷிதர்களும் இன்னும் சில வேத பண்டிதர்களும் நல்லூருக்கு வருகை தந்துள்ளனர்.

ஆக, விரிவான வேத பாராயணத்துடனும் கலச பூஜை, ஹோமம் ஆகியவற்றுடனும் ஆரம்பமாகியுள்ள ஸ்வர்ண விமான பிரதிஷ்டா யாக பூஜைகள் தில்லை வாழ் அந்தணர்களால் “வைதிக” விதிப்படி நடைபெறும் என்றும் அறிய முடிகிறது.

இது உறுதிப்படுத்தப்படுமாயின், ஈழத்தில் விமான வைதிக ப்ரதிஷ்டை நிகழ்ந்த பேராலயம் என்ற தனித்துவமும் நல்லூருக்கே அமையும்.

நல்லூரில் வழமைக்கு மாறாக இம்முறை உள் வீதியில் நிகழும் இக்கும்பாபிஷேக நிகழ்வுகள் தேவஸ்தானத்தாராலேயே வெளிவீதியிலும் வீடியோவாக ஒளிபரப்புச்செய்யப்படும் என்றும் அறியமுடிகிறது.

ஆனால் நல்லூரில் நடைபெறும் நிகழ்வுகளின் முழுவடிவம் அது நடைபெற்ற பின்னரே நிர்வாகஸ்தர் அல்லாத பிறரால் முழுமையாக அறிய முடியும் என்பதும் நல்லூரில் தனித்துவம் தானே?

தற்போதைய நல்லூர் தர்மபரிபாலகர்கள் தில்லை கூத்தன் பேரிலும் செந்திலாண்டவன் பேரிலும் அதிக பக்தி கொண்டவர்கள். அக்கோயில்களின் நடைமுறைகளை கவனித்து நல்லூரிலும் நடைமுறைப்படுத்தி வரும் பண்புடைவர்கள்.

அருணகிரிநாதரால் பாடப்பட்டதாக கருதப்படுவதும், முருக பக்தர்களின் அதீத பக்தி நிலையமுமான நல்லூரில் ஆறுமுகத்தழகன் தன் துணைவியரோடு இனி பொற்கூரை நிழலில் எழுந்தருளப்போகிறான். இனியேனும் அவன் நம்மை பன்னிரு கண்ணில் ஒரு கடைக்கண் நோக்காவது செய்து கடாக்ஷிக்க பிரார்த்திப்போம்.

முல்லையின் முறுவல் கொள் மங்கையாளுடன்
கல்லையும் கசியச் செய் கருணையாளனாய்
நல்லை பொற் கோயிலில்
நல்லருள் புரியும்
எல்லையில் அருளுடை இறையை ஏத்துவாம்
( குமாரகாவியம் -4)

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தியாக. மயூரகிரிக் குருக்கள்

#ஸ்வர்ணவிமானம் #தங்கவிமானம் #நல்லூர் #பொற்கூரை#வைதிகபிரதிஷ்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories