மறந்த திதியை மாசியில் கொடுக்கலாம்

Published:

மாசிமாசம் புனிதம் நிறைந்த மாதம். பல்வேறு ஆன்மீக சிறப்புகள் நடைபெற்ற மாதமாகவும் மாசிமாதம் இருக்கிறது. காதலால் வள்ளியை முருகன் கரம் பிடித்ததாக இருக்கட்டும். சிவனுக்கு காதில் பிரம்ம ரகசியத்தை சொல்லி தகப்பன் சாமி என்ற பட்டத்தை பெற்றதாகட்டும், முருகனின் பெருமைகளில் நீக்கமற நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் நடந்தது மாசிமாதம் மகம் நட்சத்திரத்தில்தான். இரண்யாட்சன் பூமியை சுருட்டிக் கொண்டு பாதாள லோகத்தில் மறைந்தபோது, வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டாரே விஷ்ணுபகவான், அந்த சிறப்புமிகு மூன்றாவது அவதாரம் நிகழ்ந்தது மாசி மகநாளில்தான். சிம்மத்தில் குரு கும்பத்தில் சூரியன் இருக்கும்போது சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்நாளைத்தான் மாசி மகாமகம் என்பார்கள். புனித நீராடும் நாள். பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைக்கும் நாள், மாசிமகம்.
இந்த மாசி மகத்திற்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. நம் முன்னோர்கள் மறைந்த திதி தெரியா விட்டால் அல்லது வருடாந்திர திதி தரும் நாள் போய், அந்த நாளும் கடந்து போய் விட்டால், மறைந்தவர்களுக்கான திதியை மறந்த திதியாக மாசி மாதம் மகாமகநாளில் தரலாம் என்பது வேதவாக்கு.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.03 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img