மகர ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் | விளம்பி 2018-2019

Published:

தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டில் வரும் நற்செய்திகள் என்ன என்பதைப் பார்க்கும் முன், தற்போதைய நிலவரம் என்ன என்பதைப் பார்ப்போம்.
உங்கள் மனதில் ஏராளமான எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக பலமான யோசனை வருகிறது. உங்களை அசைத்து பார்க்கிற அளவிற்கு எதுவும் நடந்து விடவில்லை. ஆனாலும் மனதில் ஒரு குழப்பம் தயக்கம் இருக்கிறது. அது எதனால் என்பதை கண்டறிய முடியவில்லை. காரணமும் தெரியவில்லை. தேவையற்ற வீண் பயம் என உள்மனம் சொல்கிறது. இருந்தாலும் மீண்டும் மீண்டும் மனம் தடுமாடுகிறது. முதற்கோணல் முற்றும் கோணல் என்கிற கதையாக எதுவும் இல்லை. இழப்புகள், ஏளங்கள், எதிர்ப்புகள் இல்லை. ஆனால் நடுநிசி தாண்டியும் தூக்கம் வரவில்லை. இதற்கெல்லாம் காரணம் சனிபகவான். ஏழரைச்சனியாக வந்திருக்கிறார். வந்தவுடன் ஏடாகூடமாக செய்கிற பழக்கம் இல்லாதவர். ஆனாலும் அதன் அதிர்வுகளை தருவார். அந்த அதிர்வுதான் உங்களை காட்டுக்கும் மேட்டிற்கும் இழுக்கும் குழப்பமான நிலை. என்றாலும் ஒரு சுபசெய்தி. தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14. ஏப்ரல் 24ல் சனிபகவான் வாக்கிய கணித ரீதியில் வக்கிரமாகிறார். அதனால் தமிழ் புத்தாண்டில் அதற்கு விடை கிடைக்குமா என்பதைப் பார்ப்போம்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img