December 6, 2025, 3:33 PM
29.4 C
Chennai

மலையக தமிழர்களுக்கு இந்தியா துணை நிற்கும்: மோடி உறுதி

நுவரா எலியா:

இந்தியா, இலங்கை வாழ் மலையக மக்களுக்கு என்றும் துணை நிற்கும் என்று மோடி உறுதி அளித்துப் பேசினார்.

இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோடி, புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியினரின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா – இலங்கையின் முக்கிய இணைப்பாக மலையகத் தமிழர்கள் விளங்குகிறார்கள். கடின உழைப்பாளிகள் என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர்.

இலங்கையின் கல்வி, பொருளாதார திட்டங்களுக்கு இந்தியா உதவுகிறது. 700 இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இந்தியா – இலங்கை உறவை மேலும் வலுப்படுத்துவது நம் கடமை. இலங்கை அரசுடன் இந்தியாவும் இணைந்து இந்திய வம்சாவளியினரின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்கிறது.

மலையகத் தமிழர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்தியா ஒத்துழைப்பு தரும். தமிழக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த மண்ணைச் சேர்ந்தவர். இந்தியாவின் தேசியத் தலைவராக விளங்கியவர். எனவேதான் இந்த மண்ணிற்கும் இந்தியாவிற்கும் ஒரு பந்தம் இருக்கிறது என்றேன். இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், மலையக மக்கள் உலகுக்கு அளித்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று! என்று புகழாரம் சூட்டினார்.

இலங்கை பயணத்தை ஒட்டி, தனது டிவிட்டர் பதிவுகளில் தமிழில் டுவிட்டிய மோடி, மலையகத் தமிழர்கள் மத்தியில் பேசிய போதும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பேசினார்.

தமிழ்த் தாயின் பிள்ளைகளான நீங்கள் பழைமையான தமிழ் மொழியைப் பேசுவதில் பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்ட மோடி, இந்திய, இலங்கை அரசுகளுக்கு இணைப்பு மலையக மக்கள் என்றார். நான் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன், வளர்ச்சிக்கான செய்தியை காந்தி தெரிவித்தார். காந்தி இலங்கை மலையகப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். காந்தி சர்வதேச மையம் மாத்தளையில் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை, தஞ்சை நாயக்கர்களுடன் இலங்கை அரசர்கள் திருமண உறவு கொண்டிருந்தனர். மலையக மக்களின் உறவினர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றனர். மலையக மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories