மலையக தமிழர்களுக்கு இந்தியா துணை நிற்கும்: மோடி உறுதி

நுவரா எலியா:

இந்தியா, இலங்கை வாழ் மலையக மக்களுக்கு என்றும் துணை நிற்கும் என்று மோடி உறுதி அளித்துப் பேசினார்.

இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோடி, புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியினரின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா – இலங்கையின் முக்கிய இணைப்பாக மலையகத் தமிழர்கள் விளங்குகிறார்கள். கடின உழைப்பாளிகள் என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர்.

இலங்கையின் கல்வி, பொருளாதார திட்டங்களுக்கு இந்தியா உதவுகிறது. 700 இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இந்தியா – இலங்கை உறவை மேலும் வலுப்படுத்துவது நம் கடமை. இலங்கை அரசுடன் இந்தியாவும் இணைந்து இந்திய வம்சாவளியினரின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்கிறது.

மலையகத் தமிழர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்தியா ஒத்துழைப்பு தரும். தமிழக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த மண்ணைச் சேர்ந்தவர். இந்தியாவின் தேசியத் தலைவராக விளங்கியவர். எனவேதான் இந்த மண்ணிற்கும் இந்தியாவிற்கும் ஒரு பந்தம் இருக்கிறது என்றேன். இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், மலையக மக்கள் உலகுக்கு அளித்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று! என்று புகழாரம் சூட்டினார்.

இலங்கை பயணத்தை ஒட்டி, தனது டிவிட்டர் பதிவுகளில் தமிழில் டுவிட்டிய மோடி, மலையகத் தமிழர்கள் மத்தியில் பேசிய போதும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பேசினார்.

தமிழ்த் தாயின் பிள்ளைகளான நீங்கள் பழைமையான தமிழ் மொழியைப் பேசுவதில் பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்ட மோடி, இந்திய, இலங்கை அரசுகளுக்கு இணைப்பு மலையக மக்கள் என்றார். நான் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன், வளர்ச்சிக்கான செய்தியை காந்தி தெரிவித்தார். காந்தி இலங்கை மலையகப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். காந்தி சர்வதேச மையம் மாத்தளையில் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை, தஞ்சை நாயக்கர்களுடன் இலங்கை அரசர்கள் திருமண உறவு கொண்டிருந்தனர். மலையக மக்களின் உறவினர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றனர். மலையக மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories