December 6, 2025, 3:11 AM
24.9 C
Chennai

கணவன், மனைவி தகராறு! தாறுமாறாய் வெட்டி கொடூரம்!

micsiko 1 - 2025

மெக்ஸிகோவைச் சேர்ந்த 46 வயதான நபர் எரிக் ஃபிரான்செஸ்கோ ரோப்லெடோ , இவரின் இரண்டாவது மனைவி 25 வயதான இங்க்ரிட் எஸ்கமில்லா இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை, சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகுந்த குடிபோதையில் வீட்டுக்கு வந்த எரிக் தன் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையேயான சண்டை உச்சத்தை எட்டியுள்ளது.

கணவரின் தொல்லை தாங்காமல் அவரை கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார் மனைவி எஸ்கமில்லா. இதைக் கேட்டு இன்னும் அதிக கோபடைந்த எரிக், என்னை கொலை செய் என்று கூறிக்கொண்டே சமையல் செய்ய உதவும் கத்தியை எடுத்து வந்து மனைவியைக் குத்தியுள்ளார்.

meksiko - 2025

இதனால் சம்பவ இடத்திலேயே விழுந்து எஸ்கமில்லா உயிரிழந்துள்ளார். அளவுக்கு அதிகமான குடிபோதையிலிருந்த எரிக், அப்போதும் ஆத்திரம் அடங்காமல் தன் மனைவியின் உடலை மறைக்க முயன்று அவரது உடலில் தோலை மட்டும் தனியாக வெட்டி எடுத்துள்ளார். பின்னர் உடல் பாகங்கள், உடல் உறுப்புகளை வெளியில் எடுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இறுதியாக அனைத்து உடல் பாகங்களையும் தன் வீட்டுக்கு அருகில் உள்ள ஏரியில் போட்டு மறைத்துள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்து கொலை நடந்த தடம் தெரியாமல் அழித்துள்ளார். அனைத்தையும் செய்துவிட்டுத் தான் எப்படிக் கொலை செய்தேன் என்பதைத் தன் முதல் மனைவிக்குப் போன் செய்து கூறியுள்ளார் எரிக்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், எரிக்கை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் மனைவியின் உடலை வீசிய ஏரியையும் அடையாளம் காட்டியுள்ளார். பின்னர் காவலர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

micsiko 2 - 2025

இதற்கிடையில் மிகவும் சிதைந்த நிலையிலிருந்த எஸ்கமில்லாவின் உடலைத் தடயவியல் அதிகாரிகள் புகைப்படம் எடுத்து பத்திரிகைக்குக் கொடுத்துள்ளனர்.

மெக்ஸிகோவைச் சேர்ந்த சில குறிப்பிட்ட பத்திரிகைகளும் தங்கள் அட்டைப் பக்கத்தில் அந்தப் பெண்ணின் கொடூர புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மெக்ஸிகோவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களைக் கொதிக்க வைத்துள்ளது.

ஒரு பெண்ணின் மிகவும் கொடுமையான புகைப்படத்தை எப்படி வெளியிடலாம் என்றும், இந்தக் கொடுமைக்குக் காரணமானவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பல ஆயிரக்கணக்கானவர்கள் மெக்ஸிகோ சாலைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது. `எஸ்மில்லாவின் கொடூர புகைப்படத்தைச் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனால், நாங்கள் அவருக்கு ஆதரவாக சில அருமையான புகைப்படங்களை எஸ்கமில்லாவின் பெயரில் வெளியிடுகிறோம்’ என்று நெட்டிசன்கள் இயற்கை, பூ போன்ற புகைப்படங்களுடன் எஸ்கமில்லாவின் பெயரை இணைத்து வெளியிட்டு வருகின்றனர்.

க்ஸிகோவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 3,142 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 10 பெண்கள் வீதம் அங்கு கொலை செய்யப்படுவதாக பெண்ணிய அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்தக் கொடூர குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories