சூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்!

Published:

marriage-of-a-child
marriage-of-a-child

மகள் சூரியன் அஸ்தமித்த பிறகு வீட்டுக்கு வந்ததால் திருமணம் செய்வித்த பெற்றோர்!

வயதோடு தொடர்பு இன்றி பெண்கள் யாராவது சூரியன் அஸ்தமித்த பிறகு மாலை நேரம் கழித்து வீட்டுக்கு வந்தால் அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து விடுவார்கள் பெற்றோர்கள். இது அவர்களின் சம்பிரதாயம். சிறு பெண்கள் ஆனாலும் பால்ய விவாகம் செய்வதற்கு ரெடி ஆகி விடுவார்கள்.

அவ்வாறு 12 வயது நூர் ஹெராவதி என்ற பெண் சூரியன் மறைந்த பிறகு வீட்டுக்குத் திரும்பி வந்தாள். அதுவரை எங்கு சென்று இருந்தாய் என்று பெற்றோர் கேட்டபோது அந்தப் பெண் சுஹைமி என்ற 15 வயது பையனின் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறினாள். அதனால் பெற்றோர் சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்கள் இருவருக்கும் பால்ய விவாகம் செய்து வைத்தார்கள்.

இந்த சம்பிரதாயம் எங்கு நடக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்தோனேஷியாவில்.

இந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை. இது தொடர்பான வீடியோ சோஷல் மீடியாவில் வைரலாகி வருவதால் இது குறித்து பெரிய அளவில் சர்ச்சைகள் நடந்து வருகின்றன.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஆனால், இந்தோனேஷியா ரிலீஜியஸ் அஃபைர்ஸ் ஆபீஸ் (கேயூஏ) இந்த திருமணத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை.

அந்த வீடியோ இதோ…

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img