விரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்! தமிழிசை நம்பிக்கை!

Published:

tamilisai
tamilisai

விரைவில் கொரோனா வேக்சின் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்… என்றார் தெலங்காணா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கு பார்மா ஜாம்பவான்கள் பாரத் பயோடெக் தயார் செய்து வரும் கோவாக்ஜின் விரைவில் பொதுமக்கள் உபயோகத்திற்கு வரும் என்று தெலங்காணா கவர்னர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார்.

ஹைதராபாத் சாமீர்பேட்டில் உள்ள பாரத் பயோடெக்கை செவ்வாயன்று சென்று பார்த்த கவர்னர் வேக்சின் தயாரிப்பதில் முனைந்துள்ள விஞ்ஞானிகளுடன் உரையாடினார்.

கொரோனா வாக்சின் குறித்து விஞ்ஞானிகள் மிகவும் பொறுப்புடன் பணியாற்றி வருகிறார்கள் என்றார். பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி நம் நாட்டில் கொரோனாவுக்கு வாக்சின் தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று குறிப்பிட்டார்.

2020 க்குள்ளாகவே கொரோனாவுக்கு வாக்சின் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தெளிவாகக் கூறினார். வாக்சின் தயாரிப்பில் ஓய்வின்றி உழைக்கும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக கவர்னர் கூறினார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img