December 7, 2025, 12:28 AM
25.6 C
Chennai

ஆற்றில் மிதந்த மாணவியின் சடலம்! சக தோழர்களால் நேர்ந்த விபரீதம்!

alisha - 2025

பாரிசில் ஒரு மாணவியை சக மாணவன் மற்றும் அவரின் காதலி சேர்ந்து கொடூரமாக தாக்கி ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிசிற்கு வெளியில் இருக்கும் Argenteuil என்ற பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய மாணவி அலிஷா. இந்த மாணவி உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அலிஷாவிற்கும் உடன் பயிலும் சக மாணவன் மற்றும் அவரின் காதலிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதாவது அவர்கள் இருவரும் இணையதளம் மூலமாக அலிஷாவுடன் சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் வருத்தமடைந்த அலிஷா தன் தாயிடம் இது பற்றி கூறியதோடு, “என்னை அவர்கள் இருவரும் ஒருநாள் கொன்று விடுவார்கள், பாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் அந்த காதலர்கள் இருவரும் கடந்த திங்கள்கிழமை அன்று அலிஷாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி சந்திக்க அழைத்துள்ளனர்.

இதனால் அலிஷாவும் அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அந்த மாணவன் அலிஷாவை கீழே தள்ளி குத்தி, அடித்து, தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கியதோடு இருவரும் சேர்ந்து ஆற்றில் தூக்கி வீசி உள்ளனர். மேலும் அந்த மாணவன் கைரேகை படாமல் இருப்பதற்காக கையுறை ஒன்றையும் அணிந்துள்ளார்.

அதன்பின்பு அந்த மாணவன் வீடு திரும்பிய போது அவரின் சட்டையில் ரத்தக்கறை இருந்துள்ளது. மேலும் அந்த மாணவன் தன் தாயிடம் அலிஷாவை அடித்து ஆற்றில் தூக்கி போட்டதாக கூறியிருக்கிறார்.

alisha parents 1 - 2025

இதனால் பதறிப்போன மாணவனின் தாய் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்பு அவர் வீட்டிற்கு சென்று பார்க்கையில் மாணவர் மற்றும் அவரின் காதலி தப்பிச்சென்றுள்ளனர்.

இதனிடையே அலிசாவின் தாய், தன் மகள் மாயமானதாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் மாணவனின் தாய் கொடுத்த தகவலின் படி காவல்துறையினர் ஆற்றில் சென்று பார்த்தபோது அலிசாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மாணவன் மற்றும் அவரின் காதலி இருவரும் நண்பர் ஒருவரின் வீட்டில் மறைந்து இருப்பதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அரசு செய்தி தொடர்பாளர் Gabriel Attal கூறியுள்ளதாவது, இந்த மாணவிக்கு நேர்ந்தது மிகவும் கொடுமையானது, சகித்துக்கொள்ள முடியாதது என்றார். மேலும் இக்கொடூரத்தை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் வழக்கமாக மாணவர்கள் வகுப்பறையில் சண்டையிடுவது உண்டு. ஆனால் சமீப காலமாக பள்ளி முடிந்து இணையம் வழியாகவும் சண்டையிட்டு வருவது தொடர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories