கலவரம் ஏற்பட்ட கண்டியில் ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கை, கண்டி மாவட்டத்தின் கண்டி காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமல் படுத்தப்பட்ட காவல்துறை ஊரடங்கு உத் தரவு இன்று காலை 6 மணியுடன நீக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கலவரம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்து சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினமும், நேற்றும் தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற கலவரச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22ஆம் தேதி தெல்தெனிய பகுதியில் ரோந்து வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் ஒரு வண்டியில் சென்ற சிலரால் தாக்கப்பட்டார். அவர் தாக்கப்படும் காட்சி, அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் மறுநாள் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் முதல் தெல்தெனிய நகர் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

அப்போது கலவரக்காரர்களில் சிலர், நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவற்றுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும் நேற்று பிற்பகல் சிலர் தெல்தெனிய பகுதிகளில் மீண்டும் கலவரத்தில் இறங்கியுள்ளனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்

இதனிடையே கண்டி – திகன பகுதில் நேற்று நடைபெற்ற கலவரச் சம்பவம் தொடர்பாக, நடுநிலையான சுதந்திரமான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்ரீபால சிறீசேன உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு பாதுகாப்பு பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், அங்கே பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக சிறப்பு செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ:  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories