பேஸ்புக் அக்கவுண்டை டெலிட் செய்யச் சொல்கிறார் வாட்ஸ்அப் துணை நிறுவுனர்!

brian acton - 2026

இதுதான் நேரம்.. பேஸ்புக்கை டெலிட் செய்க – இப்படி ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார் வாட்ஸ் ஆப் துணை நிறுவுனர். இதைக் கண்டதும் பலருக்கு அதிர்ச்சி!

தேர்தல் நேரத்தில் கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனம், பேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து அதன்படி உத்திகளைக் கையாண்ட பிரச்னை இப்போது பெரிதாகி இருக்கிறது. பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று பலரும் இப்போது குற்றம் சாட்டி வருகிறார்கள்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து, அவர்களின் தகவல்களை முறையின்றி சோதனை செய்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் இதற்கான தனது பயனாளிகளிடம் எந்த அனுமதியும் பெறாமல் இந்த சர்வே சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் வியூகம் வகுக்கப் பட்டதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவன முன்னாள் ஊழியர் ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதை அடுத்து பெரும் புயல் கிளம்பியது அமெரிக்காவில். இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் துணை நிறுவனராகத் திகழ்ந்த பிரைன் ஆக்டன் ஒரு டிவீட் செய்தார். அதில் இதுதான் சரியான நேரம். பேச்புக்கை விட்டு விலக… என்று! இப்போது இந்த டிவீட் பலராலும் விவாதிக்கப் பட்டு வருகிறது. டிவிட்டரில் இந்த ஹாஷ்டாக் போட்டு பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த டிவீட் இதுதான்…

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

 

பிரைன் ஆக்டன், வாட்ஸ் ஆப் நிறுவனம் தொடங்குவதில் மூளையாக செயல்பட்டவர். அதன் துணை நிறுவனராகத் திகழ்ந்தவர். Apple, Yahoo, WhatsApp, Signal (ஆப்பிள், யாஹூ) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். தொழில்நுட்பத் துறையில் பலராலும் மதிக்கப்படும் நபர்.

கடந்த 2014ஆம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கி, வாட்ஸ்அப்பை தனதாக்கிக் கொண்டது. இருப்பினும், பிரைன் ஆக்டன் தொடர்ந்து வாட்ஸ்அப் குழுவில் பணியாற்றி வந்தார். பின்னர் சில மாதங்களுக்கு முன் பிரைன் ஆக்டன் வாட்ஸ் ஆப்பில் இருந்து விலகி சிக்னல் எனும் புஷ் ஆப் நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories