வெஸ்ட் இண்டீஸுடன் ஆஸ்திரேலியா பெற்ற த்ரில் வெற்றி!

WiVsAus - 2026

உலகக் கோப்பை 10-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கும் வெஸ்ட் இண்ட்டீஸ் அணிக்கும் இடையேயான போட்டி நாட்டிங்காம் நகரில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 15 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது வெஸ்ட் இண்டீஸ்! இதை அடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியை தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியினர் பந்து வீச்சில் திணறடித்தனர்.

முதல் எட்டு ஓவரில் டேவிட் வார்னர், ஃபின்ச், உஸ்மான், மேக்ஸ்வெல் அனைவரும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். நான்காவதாக களமிறங்கிய ஸ்மித் மட்டும் தாக்குப் பிடித்து ஆடினார். அணியின் ஸ்கோர் 38 ஆக இருந்தது.

பின்னர் வந்த ஸ்டோனிஸ்ஸும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி இப்படி விக்கெட்களை இழப்பதை ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தான், ஆச்சரியப் படுத்தும் விதமாக வேகப்பந்து வீச்சாளர் நாதன் கௌல்டர் 60 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து அசத்தினார். உலகக் கோப்பையில் 8-வதாகக் களமிறங்கி அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் நாதன்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஸ்டீவ் ஸ்மித் 73 ரன் அடிக்க இறுதியில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்தது.

289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குப் போட்டியாக விரைவிலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

லீவிஸ் ஒரு ரன்னில் அவுட். கெயில் 21 ரன்னில் எல்.பி.டபிள்யூ, பூரன், ஹிட்மேயர் தலா 21 ரன்களில் அவுட், ஹோப் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க.. மிட்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.

ஸ்டீவ் ஸ்மித், ஃபின்ச், மேக்ஸ்வெல் அனைவரும் த்ரில் கேட்சுகளைப் பிடித்து அசத்த 45,46,47 என அடுத்தடுத்த மூன்று ஓவரில் 3 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் பறிகொடுத்தது!

50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து வெஸ்ட் இண்டீஸ் 273 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்திய நாதன் கௌல்டருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அளிக்கப்பட்டது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories