பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தவறு நடந்து விட்டது: ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவுனர் மார்க் சூகர்பெர்க்
வரும் காலங்களில் இது போல தகவல் திருட்டை பேஸ்புக் சகித்துக் கொள்ளாது என்றும், கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை பேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்யும் என்றும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்றும் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் மார்க் சூகர்பெர்க் வெளியிட்டுள்ளார்.
கலவரத்தைத் தூண்டும் ரத யாத்திரை அரசியல்; ‘ஓவர் ஆக்ட்’ அன்சாரியின் ‘வைரலான குரல்’?
பிரியாணி வாங்கி உண்டு பிரியமுடன் அமைதியாக ஒருவரை ஒருவர் அரவணைத்து இருக்கும் மாநிலத்தில் மதக் கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். அது யார், எவர் என்பதை, திறனுள்ள தமிழக உளவுத் துறையும், மத்திய உளவுத் துறையும் நிச்சயம் கண்டுபிடித்து குறிப்பெடுத்து வைத்திருக்கும்!
ராம ராஜ்ய ரத யாத்திரையின் பின்னணி என்ன? ஏன் இவ்வளவு சர்ச்சை ஆனது?
இதைத்தான், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும், சட்டமன்றத்தில் முதலமைச்சரும் தெளிவாகச் சொன்னார்கள். இது ஒரு தனிப்பட்ட அமைப்பின் வழக்கமான ரத யாத்திரை. இதன் பின்னணியில் விசுவ இந்து பரிசத்தோ ஆரெஸ்ஸெஸ்ஸோ இல்லை என்று சொன்னார்கள்.
நிரவ் மோடியின் முன்னோடி மோசடி: வெளிச்சத்துக்கு வந்த கனிஷ்க் ஜுவல்லர்ஸ்
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரஷாந்த் டவர்ஸில் செயல்பட்டு வருகிறது தங்க நகை தயாரிப்பு நிறுவனமான கனிஷ்க். இந்த நிறுவனமும் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா ஆவி துரத்துவது உண்மையா? அடுத்தடுத்த மரணங்களால் சசிகலா குடும்பம் ‘திகில்’!
இன்றும், சசிகலா, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சில தகவல்களைக் கூறியிருக்கிறார். ஆனால், அவை முன்னுக்குப் பின் முரணாகப் பார்க்கப் படுகின்றன. ஆவி வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம், ஆனால் ஆவியால் துரத்தப்பட்டு ஏற்படுவதாகக் கூறப்படும் மரணங்களும் ஆவி குறித்த மக்களின் நம்பிக்கையும் இன்றும் உண்மையாகவே இருக்கின்றனவே!
பஞ்சாங்கம் என்ன சொல்லுது; ரஜினியின் அரசியல் வாழ்க்கை பற்றி…!
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஜக ஒரு தொகுதி கூட வெற்றி பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்
ரத யாத்திரை எல்லா மாநிலங்களும் வந்தது இங்கே மட்டும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் வட மாநிலங்களில் இருந்து கிளம்பி 5 மாநிலங்கள் வழியே இங்கே வந்து, ராமேஸ்வரம் போய், பின் கன்னியாகுமரி போய் அப்படியே ஊருக்கு போய் விடுவார்கள். அவர்கள் அவர்களின் வழியில் அமைதியாக அப்படியே சென்று கொண்டிருக்கிறார்கள்.
தமிழகம் வந்த ரத யாத்திரை: செங்கோட்டை எல்லையில் உற்சாக வரவேற்பு
ரத யாத்திரை வருவதையொட்டி செங்கோட்டையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
எங்கள பாஸ் பண்ணி விட்டுடுங்க… ப்ளீஸ்! விடைத்தாளில் ரூபாய் நோட்டு லஞ்சம் வைத்து கெஞ்சல்!
விடைத்தாளில் அவர்கள் எழுதியிருக்கும் விடையை மதிப்பீடு செய்தே தகுந்த மதிப்பெண்களை ஆசிரியர்கள் போடுகிறார்கள். எந்த ஆசிரியரும் விடைத்தாளில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஏற்பதில்லை என்று கூறினர்.
வெறுப்பு அரசியலில் திளைக்கும் ஸ்டாலின்! நாடெங்கும் கெடாத அமைதியை தமிழகத்தில் கெடுக்க நினைப்பவர்கள்!
இந்த ரத யாத்திரையால், தமிழகத்தில் அமைதி கெட்டுவிடும் என்பது இவர்களின் கருத்து. தமிழகம் பெரியார் மண் எனக் கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திராவிட அரசியல்வாதிகள், இந்த மண் ஆன்மிகம் தழைத்த ஹிந்துப் பாரம்பரிய மண் தான் என்பதை உணரும் காலத்தினை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி ஆரம்பம்; 2ஜி.,யில் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ வழக்கு!
2ஜி முறைகேட்டு வழக்கில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அது போல், சிபிஐ.,யும் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
அதிமுக., மீது பழி போடும் சமாஜ்வாதி; நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நடத்தவிடாமல் செய்கிறதாம்!
அக்கட்சியின் எம்பி., ராம்கோபால் யாதவ், எதிர்க் கட்சிகள் விவாதத்துக்கு தயாராகவே இருக்கின்றன. ஆனால் அதிமுக.,தான் மத்திய அரசின் தூண்டுதலில் அவையை நடத்தவிடாமல் செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
