December 5, 2025, 9:31 PM
26.6 C
Chennai

காதலித்து ஏமாற்றியதாக சனம் ஷெட்டி புகார்; தர்ஷன் மீது வழக்கு!

407b4207fe23e6fd145c93e8d3ac0eb0 - 2025

காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காதலித்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்ய மறுத்ததாக சனம் ஷெட்டி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் டிவி ஷோவான பிக் பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த இவர் மாடலிங் செய்து வந்தார்.   பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு  கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே, இவர்  நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வந்தார். ஆனால் அந்த ஷோவில் இருந்து வெளியேறிய பின்னர், தர்ஷன் சனம் ஷெட்டியை தவிர்த்தார். 

அவர்களுக்கு ஏற்கெனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்ததாகவும்,  தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும், கடந்த ஜனவரி மாதமே நடிகை சனம் ஷெட்டி போலீஸில் புகார் அளித்தார். தர்ஷன் தன்னிடம் 15 லட்சம் ருபாய் வரை பணம் வாங்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

எனினும் போலீஸார் இந்தப் புகார் குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருந்தனர்.  இந்நிலையில் சனம் ஷெட்டி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தர்ஷன் குறித்து தாம் அளித்த புகாரில், வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தார். 

இந்நிலையில் நீதிமன்றம் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தர்ஷன் பிக் பாஸ் 3 ஷோவில் போட்டியாளராக இருந்த போது, பிக் பாஸ் வீட்டில் மற்றொரு போட்டியாளரான ஷெரின் உடன் மிக நெருக்கமாக பழகினார். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கப் பட்டது. அதுவே தர்ஷன் – சனம் ஷெட்டி பிரிவுக்கு காரணம் என்றும், அதற்கு ஷெரின் தான் காரணம் என்றும் கிசுகிசுக்கப் பட்டது.
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories