அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார்; பெரியார் ஒடுக்கப்பட்ட… பெண்ணுரிமைக்காக ..!

stalinspeech - 2026

அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார் எனும் ரேஞ்சுக்கு, தமிழக பாடப் புத்தகங்களில் பெரியார் பெண்ணுரிமைக்காக குறல் கொடுத்தார், சாதி முறைக்கு எதிராகப் பேசினார் என்றெல்லாம் கடைந்தெடுத்த பொய்களை வலியத் திணித்து வைத்திருக்கிறார்கள் திராவிட இயக்கங்கள் தங்கள் ஆட்சிக் காலங்களில்!

இந்தத் தற்குறிகளின் வடிகட்டிய பொய்களை எல்லாம் வளரும் தலைமுறை தமிழ் மாணவன் படித்த் மூளை குழம்பி முட்டாளாக வேண்டியது தலை எழுத்தாகிவிட்டது. இன்று தமிழ் மாணவர்க்கு தமிழ் படிக்கவே திண்டாட்டம்! இதுவே அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட இயக்கங்களின் ஆட்சியின் சாதனை என்று தமிழ்ப் பெரியவர்கள் உள்ளம் நொந்து கூறுகிறார்கள்.

இப்போது, திராவிட இயக்கத்தின் மிச்சம் சொச்சமாகத் திகழும் திமுக.,வும் திக.,வும் சமூக வலைத்தளங்களால் சிக்கி சின்னாபின்னப் படுகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கேள்விக் கணைகள் பாய்கின்றன. இதற்குப் பதிலளிக்கத் தடுமாறுகிறார்கள் இவர்கள்.

இப்போது பஞ்சமி, மிஸா, அறிவாலயம் என்று வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகளினூடே, ஈ.வே.ரா குறித்து ராம்தேவ் கூறியதாகக் கூறப் படும் சர்ச்சைப் பேச்சு, அடுத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின்,

தந்தை பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராகப் பேசினார்.

ஆதிக்க சக்திகளுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் பாதுகாக்கும் என்று டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இது அடுத்த கட்ட விவாதத்துக்கு நகர்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Topics

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories