December 5, 2025, 2:46 AM
24.5 C
Chennai

எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்… அருண் ஜேட்லி!

arun jaitley - 2025
Arun _jaitley

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.

பாஜக.,வின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்தவர். மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். கடந்த மோடி அமைச்சரவையில் (2014-2019) நிதி அமைச்சராக பதவி வகித்த அருண் ஜேட்லி அண்மைக் காலமாக உடல் நலக் குறைவால் அவதிப் பட்டார். எனவே இந்த முறை அவர் தேர்தலில் போட்டியிடவும் ஆர்வம் காட்டவில்லை; அமைச்சரவையிலும் பங்கேற்க மறுத்துவிட்டார்.

பழுத்த அரசியல்வாதி; மூத்த வழக்கறிஞர்; பாஜக., மூத்த தலைவர் என முக்கிய இடத்தில் இருந்தவர். அண்மைக் காலமாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதத்தில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

arun jetli - 2025

எய்ம்ஸில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சிகிச்சைக்காக சென்றார். அந்த நேரம் அவரது நிதி அமைச்சகப் பொறுப்பை பியூஷ் கோயல் கவனித்து, பட்ஜெட்டை சமர்ப்பித்தார்.

இந்நிலையில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் கடந்த 9ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அருண் ஜேட்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இரு தினங்களுக்கு முன்னர் கூட அவர் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பப் பட்டது. ஆயினும், அவர் உடல் நிலை சற்று முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் குடும்பத்தார் தெரிவித்திருந்தனர்.

arunjaitly - 2025

இந்நிலையில் பாஜக., தலைவர், பிரதமர் என தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரைப் பார்த்து வந்தனர். சுவாசக் கருவிகளின் உதவியுடன் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில் பகல் 12 மணி அளவில் அவர் காலமானதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மோடி தமது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அவர் நன்றாக வாழ்ந்தார், மிகவும் அற்புதமான தருணங்களை நமக்காக விட்டுச் சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories