காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதே சிறந்தது; 370 நீக்கம் தொடர்பில் அரசுக்கு ஆதரவு: ஜாமியத் உலமா-இ-ஹிந்த்!

maulana mahmud madani jamait ulema i hind - 2026

மோடி அரசின் காஷ்மீர் குறித்த முடிவுக்கு ஜாமியத் உலமா-இ-ஹிந்த் ஆதரவு!

ஜாமியத் உலமா-இ-ஹிந்த் 370 வது பிரிவை நீக்குவதை ஆதரிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மோடி அரசாங்கத்தை குறிவைத்து வரும் நிலையில், ஒரு உயர் முஸ்லீம் அமைப்பு மோடி அரசை ஆதரித்துள்ளது! ஜாமியத் உலமா-இ-ஹிந்த் காஷ்மீர் மக்களின் நலன் இந்தியாவுடன் ஒருங்கிணைந்ததில்தான் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

வியாழக்கிழமை இன்று புது தில்லியில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின் போது அந்த அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கை அழிக்க முயன்றதற்காகவும், உள்ளூர் மக்களை “கேடயமாக” பயன்படுத்தியதற்காகவும் பாகிஸ்தானை கடுமையாக சாடியது. “தேச விரோத சக்திகளும் அண்டை நாடும் மக்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி காஷ்மீரை அழிக்க முனைகின்றன” என்று அதன் ஒரு தீர்மானம் கூறுகிறது.

“காஷ்மீர் மக்களின் நலன் இந்தியாவுடன் ஒன்றிணைவதில் உள்ளது என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை,” என்று அதன் தீர்மானம் கூறுகிறது! காஷ்மீர் பிராந்தியத்தில் எந்தவொரு பிரிவினைவாத இயக்கத்தையும் ஜேயுஎச் ஒருபோதும் ஆதரிக்காது.

“காஷ்மீர் ஹமாரா தா, ஹமாரா ஹை, ஹமாரா ரஹேகா. ஜஹான் பாரத் ஹை வாஹின் ஹம் (காஷ்மீர் நம்முடையது, அது நம்முடையதாகவே இருக்கும், நாங்கள் பாரதத்துடன் இருக்கிறோம்)” என்று அதன் பொதுச் செயலாளர் மஹ்மூத் மதானி செய்தியாளர்களிடம் கூறினார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..
maulana mahmood madani Jamiat Ulama i hind - 2026

எவ்வாறாயினும், காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் ஆசைகளை “பொருட்படுத்தப் போவதில்லை” என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது. மனித உரிமைகளில் கவனம் வைத்து, காஷ்மீர் மக்களைப் பாதுகாக்குமாறு அது மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.

“காஷ்மீர் பிராந்தியத்தில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்கும் காஷ்மீர் மக்களின் இதயங்களை வென்றெடுப்பதற்கும் சாத்தியமான அனைத்து அரசியலமைப்பு வழிகளையும் அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஜாமியத் உலமா-இ-ஹிந்த் கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை மோடி அரசு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. இது, நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தின் மூலம், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது – ஜம்மு-காஷ்மீர் (சட்டமன்றத்துடன்), மற்றும் லடாக் (சட்டமன்றம் இல்லாமல்).

பிரிவு 370 ஐ ரத்து செய்ததை அடுத்து எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் தடுக்க காஷ்மீர் பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளும் முடக்கப் பட்டு, பிறகு பகுதி பகுதியாக சீர்படுத்தப் பட்டு வருகிறது.

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

இருப்பினும், முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முப்தி, ஒமர் அப்துல்லா போன்றவர்கள் பெரிய அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories