spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகாஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதே சிறந்தது; 370 நீக்கம் தொடர்பில் அரசுக்கு ஆதரவு: ஜாமியத் உலமா-இ-ஹிந்த்!

காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதே சிறந்தது; 370 நீக்கம் தொடர்பில் அரசுக்கு ஆதரவு: ஜாமியத் உலமா-இ-ஹிந்த்!

- Advertisement -

மோடி அரசின் காஷ்மீர் குறித்த முடிவுக்கு ஜாமியத் உலமா-இ-ஹிந்த் ஆதரவு!

ஜாமியத் உலமா-இ-ஹிந்த் 370 வது பிரிவை நீக்குவதை ஆதரிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மோடி அரசாங்கத்தை குறிவைத்து வரும் நிலையில், ஒரு உயர் முஸ்லீம் அமைப்பு மோடி அரசை ஆதரித்துள்ளது! ஜாமியத் உலமா-இ-ஹிந்த் காஷ்மீர் மக்களின் நலன் இந்தியாவுடன் ஒருங்கிணைந்ததில்தான் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

வியாழக்கிழமை இன்று புது தில்லியில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின் போது அந்த அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கை அழிக்க முயன்றதற்காகவும், உள்ளூர் மக்களை “கேடயமாக” பயன்படுத்தியதற்காகவும் பாகிஸ்தானை கடுமையாக சாடியது. “தேச விரோத சக்திகளும் அண்டை நாடும் மக்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி காஷ்மீரை அழிக்க முனைகின்றன” என்று அதன் ஒரு தீர்மானம் கூறுகிறது.

“காஷ்மீர் மக்களின் நலன் இந்தியாவுடன் ஒன்றிணைவதில் உள்ளது என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை,” என்று அதன் தீர்மானம் கூறுகிறது! காஷ்மீர் பிராந்தியத்தில் எந்தவொரு பிரிவினைவாத இயக்கத்தையும் ஜேயுஎச் ஒருபோதும் ஆதரிக்காது.

“காஷ்மீர் ஹமாரா தா, ஹமாரா ஹை, ஹமாரா ரஹேகா. ஜஹான் பாரத் ஹை வாஹின் ஹம் (காஷ்மீர் நம்முடையது, அது நம்முடையதாகவே இருக்கும், நாங்கள் பாரதத்துடன் இருக்கிறோம்)” என்று அதன் பொதுச் செயலாளர் மஹ்மூத் மதானி செய்தியாளர்களிடம் கூறினார்.

எவ்வாறாயினும், காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் ஆசைகளை “பொருட்படுத்தப் போவதில்லை” என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது. மனித உரிமைகளில் கவனம் வைத்து, காஷ்மீர் மக்களைப் பாதுகாக்குமாறு அது மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.

“காஷ்மீர் பிராந்தியத்தில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்கும் காஷ்மீர் மக்களின் இதயங்களை வென்றெடுப்பதற்கும் சாத்தியமான அனைத்து அரசியலமைப்பு வழிகளையும் அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஜாமியத் உலமா-இ-ஹிந்த் கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை மோடி அரசு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. இது, நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தின் மூலம், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது – ஜம்மு-காஷ்மீர் (சட்டமன்றத்துடன்), மற்றும் லடாக் (சட்டமன்றம் இல்லாமல்).

பிரிவு 370 ஐ ரத்து செய்ததை அடுத்து எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் தடுக்க காஷ்மீர் பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளும் முடக்கப் பட்டு, பிறகு பகுதி பகுதியாக சீர்படுத்தப் பட்டு வருகிறது.

இருப்பினும், முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முப்தி, ஒமர் அப்துல்லா போன்றவர்கள் பெரிய அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe