அடுத்து… பொது சிவில் சட்டம்தான்! சாட்டையை சுழற்றும் உச்ச நீதிமன்றம்!

06 July17 Supreme Court - 2026

மத்திய அரசின் அடுத்த அதிரடியாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப் படக் கூடும்.. அதற்கான முயற்சியை தீவிரப் படுத்த உச்ச நீதிமன்றம் தனது கிடுக்கிப் பிடியை போட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக.,வின் முக்கிய மூன்று கொள்கைகள் அயோத்தியில் ராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் அந்தஸ்தை ரத்து செய்து நாட்டுடன் இணைப்பது. இந்த மூன்றில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஒன்றை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. அடுத்ததாக, முத்தலாக் விவகாரத்தை சட்டவிரோதமாக்கி, பொது சிவில் சட்டத்துக்கான பிள்ளையார் சுழியைப் போட்டுள்ளது மத்திய அரசு.

அடுத்தது பொது சிவில் சட்டம். நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவரப் படுவது. இது பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கி இருந்ததால், இதுவரை மத்திய பாஜக., அரசு கூட அதில் கைவைக்க யோசித்து வந்துள்ளது. இருப்பினும், இந்த முறை முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்திருப்பதாலும், மாநிலங்களவையிலும் அதற்கான பலம் கூடிவருவதாலும், இந்த விவகாரத்தில் தனது கவனத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அதற்கு ஏற்றது போல், இந்தக் குரலை முதலில் உச்ச நீதிமன்றமே தொடங்கி வைத்திருக்கிறது. நாடு முழுவதும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய சிவில் சட்டத்தை அமல்படுத்த கடந்த 63 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இது குறித்து தற்போது வரை மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் அது கருத்து தெரிவித்திருக்கிறது. இந்தக் கருத்தானது, மத்திய அரசின் அடுத்த கட்ட தனது கொள்கையை நிறைவேற்றுவதற்கான வலுவான ஒரு காரணத்தை முன்னிறுத்தப் போதுமானதாக அமையும்.

வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத் போஸ் அமர்வு இது குறித்துக் குறிப்பிட்ட போது, அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் ஒரு நாள், சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்தனர். மத ரீதியான நம்பிக்கைகள் அடிப்படையிலான திருமண தனிச்சட்டங்கள், விவாகரத்து சட்டங்களை மாற்றி சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என நம்பினர்.

மக்களைப் பாதுகாக்கும் வகையில் சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என மாநிலங்களின் கொள்கைகள் குறித்து விவரிக்கும் சட்டப்பிரிவு 44 ன் 4 வது பத்தியில் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று வரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

modi ministry - 2026

1956ல் ஹிந்து சட்டங்கள், நெறிமுறைப் படுத்தப்பட்டு இருந்தாலும், நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் சிவில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த 1985 ல் இரண்டு வழக்குகளில் சிவில் சட்டம் குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தாலும், மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை.

சிவில் சட்ட விவகாரத்தில், கோவா சிறந்த உதாரணமாக உள்ளது. அனைவருக்கும் பொருந்தக்கூடிய சிவில் சட்டம் உள்ளது. முஸ்லிம் ஆண்கள் முத்தலாக் சொல்லி விவாகரத்து பெற முடியாது… என்று கருத்து தெரிவித்தன.

மத்திய அரசின் முத்தலாக் விவகாரம், மற்றும் அதில் அடங்கியுள்ள சில பிரிவுகள் பொது சிவில் சட்டத்தை நோக்கி மத்திய அரசு நகர்வதற்கான முன்னேற்பாடுதான் என்பதை வல்லுநர்கள் பலரும் கூறியிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories