December 6, 2025, 5:36 AM
24.9 C
Chennai

அடுத்து… பொது சிவில் சட்டம்தான்! சாட்டையை சுழற்றும் உச்ச நீதிமன்றம்!

06 July17 Supreme Court - 2025

மத்திய அரசின் அடுத்த அதிரடியாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப் படக் கூடும்.. அதற்கான முயற்சியை தீவிரப் படுத்த உச்ச நீதிமன்றம் தனது கிடுக்கிப் பிடியை போட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக.,வின் முக்கிய மூன்று கொள்கைகள் அயோத்தியில் ராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் அந்தஸ்தை ரத்து செய்து நாட்டுடன் இணைப்பது. இந்த மூன்றில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஒன்றை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. அடுத்ததாக, முத்தலாக் விவகாரத்தை சட்டவிரோதமாக்கி, பொது சிவில் சட்டத்துக்கான பிள்ளையார் சுழியைப் போட்டுள்ளது மத்திய அரசு.

அடுத்தது பொது சிவில் சட்டம். நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவரப் படுவது. இது பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கி இருந்ததால், இதுவரை மத்திய பாஜக., அரசு கூட அதில் கைவைக்க யோசித்து வந்துள்ளது. இருப்பினும், இந்த முறை முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்திருப்பதாலும், மாநிலங்களவையிலும் அதற்கான பலம் கூடிவருவதாலும், இந்த விவகாரத்தில் தனது கவனத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அதற்கு ஏற்றது போல், இந்தக் குரலை முதலில் உச்ச நீதிமன்றமே தொடங்கி வைத்திருக்கிறது. நாடு முழுவதும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய சிவில் சட்டத்தை அமல்படுத்த கடந்த 63 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இது குறித்து தற்போது வரை மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் அது கருத்து தெரிவித்திருக்கிறது. இந்தக் கருத்தானது, மத்திய அரசின் அடுத்த கட்ட தனது கொள்கையை நிறைவேற்றுவதற்கான வலுவான ஒரு காரணத்தை முன்னிறுத்தப் போதுமானதாக அமையும்.

வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத் போஸ் அமர்வு இது குறித்துக் குறிப்பிட்ட போது, அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் ஒரு நாள், சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்தனர். மத ரீதியான நம்பிக்கைகள் அடிப்படையிலான திருமண தனிச்சட்டங்கள், விவாகரத்து சட்டங்களை மாற்றி சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என நம்பினர்.

மக்களைப் பாதுகாக்கும் வகையில் சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என மாநிலங்களின் கொள்கைகள் குறித்து விவரிக்கும் சட்டப்பிரிவு 44 ன் 4 வது பத்தியில் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று வரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

modi ministry - 2025

1956ல் ஹிந்து சட்டங்கள், நெறிமுறைப் படுத்தப்பட்டு இருந்தாலும், நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் சிவில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த 1985 ல் இரண்டு வழக்குகளில் சிவில் சட்டம் குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தாலும், மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை.

சிவில் சட்ட விவகாரத்தில், கோவா சிறந்த உதாரணமாக உள்ளது. அனைவருக்கும் பொருந்தக்கூடிய சிவில் சட்டம் உள்ளது. முஸ்லிம் ஆண்கள் முத்தலாக் சொல்லி விவாகரத்து பெற முடியாது… என்று கருத்து தெரிவித்தன.

மத்திய அரசின் முத்தலாக் விவகாரம், மற்றும் அதில் அடங்கியுள்ள சில பிரிவுகள் பொது சிவில் சட்டத்தை நோக்கி மத்திய அரசு நகர்வதற்கான முன்னேற்பாடுதான் என்பதை வல்லுநர்கள் பலரும் கூறியிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories