சேலம்-கரூர், கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை பயணிகள் ரயில் சேவை தொடங்கி வைப்பு

IMG 20191015 161313 - 2026

சேலம் -கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தெற்கு ரயில்வேயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இயக்கி வரப்பட்ட சேலம்-கரூர்-சேலம், பழனி-கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை-பொள்ளாச்சி (டிஇஎம்யூ-டெமு) ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவை தற்போது நிரந்தரமாக்கப் பட்டுள்ளது.

அந்த வகையில் புதுதில்லியில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

சேலத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் வண்டி எண் 76801-76802 சேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

வண்டி எண் 76801 சேலம்-கரூர்-சேலம் பயணிகள் ரயில் சேலத்தில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.25 மணிக்கு சென்றடையும். வண்டி எண் 76802 கரூரில் இருந்து காலை 11.40 மணிக்குப் புறப்பட்டு, சேலத்திற்கு பகல் 1.25 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் வங்கல், மோகனூர், நாமக்கல், காலாங்கனி, ராசிபுரம், மல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும்.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜுனன், ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ஏ.அண்ணாதுரை, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் எம்.ஹரிகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

வண்டி எண் 56609 கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்குப் புறப்பட்டு, மாலை 4.40 மணிக்கு பழனி சென்றடையும். வண்டி எண் 56608 பழனியில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, பகல் 2.10 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் புஷ்பத்தூர், மடத்துக்குளம், மாய்வாடி சாலை, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக் கடவு மற்றும் போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்படும்.

வண்டி எண் 56184 பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு 8.40 மணிக்கு வந்தடையும். வண்டி எண் 56183 கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாள்களும் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories