December 5, 2025, 8:07 PM
26.7 C
Chennai

சேலம்-கரூர், கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை பயணிகள் ரயில் சேவை தொடங்கி வைப்பு

IMG 20191015 161313 - 2025

சேலம் -கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தெற்கு ரயில்வேயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இயக்கி வரப்பட்ட சேலம்-கரூர்-சேலம், பழனி-கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை-பொள்ளாச்சி (டிஇஎம்யூ-டெமு) ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவை தற்போது நிரந்தரமாக்கப் பட்டுள்ளது.

அந்த வகையில் புதுதில்லியில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

சேலத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் வண்டி எண் 76801-76802 சேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

வண்டி எண் 76801 சேலம்-கரூர்-சேலம் பயணிகள் ரயில் சேலத்தில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.25 மணிக்கு சென்றடையும். வண்டி எண் 76802 கரூரில் இருந்து காலை 11.40 மணிக்குப் புறப்பட்டு, சேலத்திற்கு பகல் 1.25 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் வங்கல், மோகனூர், நாமக்கல், காலாங்கனி, ராசிபுரம், மல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும்.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜுனன், ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ஏ.அண்ணாதுரை, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் எம்.ஹரிகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

வண்டி எண் 56609 கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்குப் புறப்பட்டு, மாலை 4.40 மணிக்கு பழனி சென்றடையும். வண்டி எண் 56608 பழனியில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, பகல் 2.10 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் புஷ்பத்தூர், மடத்துக்குளம், மாய்வாடி சாலை, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக் கடவு மற்றும் போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்படும்.

வண்டி எண் 56184 பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு 8.40 மணிக்கு வந்தடையும். வண்டி எண் 56183 கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாள்களும் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories