சேலம்-கரூர், கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை பயணிகள் ரயில் சேவை தொடங்கி வைப்பு

IMG 20191015 161313 - 2026

சேலம் -கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தெற்கு ரயில்வேயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இயக்கி வரப்பட்ட சேலம்-கரூர்-சேலம், பழனி-கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை-பொள்ளாச்சி (டிஇஎம்யூ-டெமு) ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவை தற்போது நிரந்தரமாக்கப் பட்டுள்ளது.

அந்த வகையில் புதுதில்லியில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

சேலத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் வண்டி எண் 76801-76802 சேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

வண்டி எண் 76801 சேலம்-கரூர்-சேலம் பயணிகள் ரயில் சேலத்தில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.25 மணிக்கு சென்றடையும். வண்டி எண் 76802 கரூரில் இருந்து காலை 11.40 மணிக்குப் புறப்பட்டு, சேலத்திற்கு பகல் 1.25 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் வங்கல், மோகனூர், நாமக்கல், காலாங்கனி, ராசிபுரம், மல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும்.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜுனன், ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ஏ.அண்ணாதுரை, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் எம்.ஹரிகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

வண்டி எண் 56609 கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்குப் புறப்பட்டு, மாலை 4.40 மணிக்கு பழனி சென்றடையும். வண்டி எண் 56608 பழனியில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, பகல் 2.10 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் புஷ்பத்தூர், மடத்துக்குளம், மாய்வாடி சாலை, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக் கடவு மற்றும் போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்படும்.

வண்டி எண் 56184 பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு 8.40 மணிக்கு வந்தடையும். வண்டி எண் 56183 கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாள்களும் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories