தாமதமாக வந்த ரயில்! நண்பர்கள் இருவரின் உயிரிழப்புக்குக் காரணமானது!

Published:

thirumalaexpress - 2026

தாமதமாக வந்த திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் இரு நண்பர்களை மோதித் தள்ளியது. ரயில் லேட்டாக வந்தது, நண்பர்களின் உயிரழப்புக்குக் காரணமாகி விட்டது.

நண்பர்கள் இருவர், தினமும் அதே வழியாக நடந்து சென்று நதியில் குளித்து திரும்புவது வழக்கம். ஆனால் அன்று அவர்கள் குளித்துவிட்டு வந்தார்களே தவிர ரயில்வே டிராக்கைத் தாண்டி வீடு வந்து சேரவில்லை.

அந்த நேரத்திற்கு எந்த ரயிலும் வராது என்பது அவர்களின் எண்ணம். அதனால்தான் எப்போதும் போல் ரயில்வே ட்ராக் வழியாக நிதானமாக நடந்து சென்று கிருஷ்ணா நதியில் குளித்தார்கள். திரும்பி வரும்போது ரயில் மோதி விபத்தில் மரணம் அடைந்தார்கள். இந்த துயரச் சம்பவம் குண்டூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

‘தாடேபல்லி’ நகர் கிருஷ்ணா கேனால் ஜங்ஷன் அருகில் ரயில் மோதி இரு நண்பர்களும் மரணமடைந்தனர்.

தாடேபல்லியைச் சேர்ந்த சுப்பாராவு (55), வெங்கடரமணா (53) எப்போதும்போல் விஜயவாடாவில் இருந்து குண்டூர் நோக்கிச் செல்லும் டிராக் மீது நடந்து வரும்போது பின்னால் இருந்து வந்த ரயில் மோதி அங்கேயே மரணித்தனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

சுப்பாராவு கொல்லர் உலை வேலை செய்பவர். வெங்கடரமணாவும் அவருடனேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒன்றாகவே குளிக்கச் செல்வது வழக்கம். அன்று மழை காரணமாக சற்று தாமதமாகக் கிளம்பினார்கள்.

எந்த நேரத்தில் எந்த ரயில் வரும் என்பது அவர்களுக்கு அத்துபடி. அதனால் தைரியமாக டிராக் மேல் நடந்து சென்றார்கள். ஆனால் தாமதமாக வந்த திருமலா எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. நான்கு கிலோ மீட்டர் வரை அவர்களை இழுத்துச் சென்றது.

நண்பர்கள் இருவருக்கும் சரியாகக் காது கேட்காது என்பதால் தூரத்தில் ரயில் வரும் சத்தத்தை அவர்கள் கேட்கவில்லையாம். அருகில் ரயிலைப் பார்த்தவர்கள் நகர்வதற்குள் விபத்து நடந்துவிட்டது என்கிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img